الشعر
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
இந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி இந்த வரியைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஸ்பெஷல் வணக்கம். எடுத்ததுமே இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு சொல்லி விடுகிறேன், நான் ஒரு கவிஞன் அல்ல! எனக்கு கவிதைக்கான இலக்கணமும் தெரியாது. கவிதை சாயலில் சில வரிகள் முயன்றதுண்டு.
கல்லூரி நாட்களில் வைரமுத்து, மு.மேத்தா, அப்துல்ரகுமான், புவியரசு இவர்களின் கவிதைகள் எனக்கு மனப்பாடம். பிறகு வண்ணதாசன், கலாப்ரியா, அறிவுமதி, வஸந்த் செந்தில், மகுடேஸ்வரன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி, நா.முத்துகுமார், லலிதானந்த் என்று பலரின் கவிதைகளை ரசித்து வந்தாலும்... கவிதை எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டதில்லை.
பத்திரிகை ஆசிரியர்களுக்கு அவ்வப்போது சுவாரசியமான யோசனைகள் தோன்றும். கதைக்கு படம் வரையும் ஓவியரை கதை எழுதச் சொல்வார்கள். எழுத்தாளனை படம் கிறுக்கச் சொல்வார்கள். அந்த மாதிரி சில சமயம் சில பத்திரிகைகள் என்னிடம் ஆள் மாறாட்டக் குழப்பத்துடன் தவறிப் போய் கவிதை எழுதச் சொல்வார்கள். நானும் நம் குழந்தை மீசை வரைந்து கொண்டு தோளில் துண்டு போட்டுக் கொண்டு கையில் ஸ்கேல் எடுத்துக் கொண்டு பள்ளி வாத்தியார் மாதிரி விளையாடுமே, அந்த மாதிரி கவிஞன் வேடம் போட்டுக் கொண்டு எழுதித் தந்ததுண்டு.
தவிரவும் எனது கதைகளின் அத்தியாயத் துவக்கத்தில் உள்ளே இழுக்கிற உத்தியாகவும், கேள்வி பதில் பகுதியிலும், கதைக்குள் கவிதை எழுதுகிற கதாப்பாத்திரத்தின் சிந்தனையாகவும் ஆங்காங்கே கவிதை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடலாமே என்கிற அசாத்தியமான, அநியாய நம்பிக்கையுடனான யோசனை தோன்றியதற்காக ரம்யா ப்ரியா கிரியேஷன்சை பிரமிக்கிறேன். ஆகவே.கவிதை ரசிகர்கள் தயவு செய்து இந்தத் தொகுப்பில் உள்ள படைப்புகளை சகிப்புத்தன்மையுடன் வாசித்து பார்டரில் பாஸ்மார்க் வாங்கியாவது தேறுகிறேனா என்று சொல்லுங்கள்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
تاريخ الإصدار
كتاب : 18 ديسمبر 2019
الشعر
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
இந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி இந்த வரியைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஸ்பெஷல் வணக்கம். எடுத்ததுமே இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு சொல்லி விடுகிறேன், நான் ஒரு கவிஞன் அல்ல! எனக்கு கவிதைக்கான இலக்கணமும் தெரியாது. கவிதை சாயலில் சில வரிகள் முயன்றதுண்டு.
கல்லூரி நாட்களில் வைரமுத்து, மு.மேத்தா, அப்துல்ரகுமான், புவியரசு இவர்களின் கவிதைகள் எனக்கு மனப்பாடம். பிறகு வண்ணதாசன், கலாப்ரியா, அறிவுமதி, வஸந்த் செந்தில், மகுடேஸ்வரன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி, நா.முத்துகுமார், லலிதானந்த் என்று பலரின் கவிதைகளை ரசித்து வந்தாலும்... கவிதை எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டதில்லை.
பத்திரிகை ஆசிரியர்களுக்கு அவ்வப்போது சுவாரசியமான யோசனைகள் தோன்றும். கதைக்கு படம் வரையும் ஓவியரை கதை எழுதச் சொல்வார்கள். எழுத்தாளனை படம் கிறுக்கச் சொல்வார்கள். அந்த மாதிரி சில சமயம் சில பத்திரிகைகள் என்னிடம் ஆள் மாறாட்டக் குழப்பத்துடன் தவறிப் போய் கவிதை எழுதச் சொல்வார்கள். நானும் நம் குழந்தை மீசை வரைந்து கொண்டு தோளில் துண்டு போட்டுக் கொண்டு கையில் ஸ்கேல் எடுத்துக் கொண்டு பள்ளி வாத்தியார் மாதிரி விளையாடுமே, அந்த மாதிரி கவிஞன் வேடம் போட்டுக் கொண்டு எழுதித் தந்ததுண்டு.
தவிரவும் எனது கதைகளின் அத்தியாயத் துவக்கத்தில் உள்ளே இழுக்கிற உத்தியாகவும், கேள்வி பதில் பகுதியிலும், கதைக்குள் கவிதை எழுதுகிற கதாப்பாத்திரத்தின் சிந்தனையாகவும் ஆங்காங்கே கவிதை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடலாமே என்கிற அசாத்தியமான, அநியாய நம்பிக்கையுடனான யோசனை தோன்றியதற்காக ரம்யா ப்ரியா கிரியேஷன்சை பிரமிக்கிறேன். ஆகவே.கவிதை ரசிகர்கள் தயவு செய்து இந்தத் தொகுப்பில் உள்ள படைப்புகளை சகிப்புத்தன்மையுடன் வாசித்து பார்டரில் பாஸ்மார்க் வாங்கியாவது தேறுகிறேனா என்று சொல்லுங்கள்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
تاريخ الإصدار
كتاب : 18 ديسمبر 2019
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة