الرواية
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
இன்றைய தேதியில் தமிழகத்தின் கிராமத்திற்கும் பெரிய நகரத்திற்குமான நாகரிக இடைவெளி வெகுவாக குறைந்து போயிருக்கிறது. கிராமங்களில் வயதுக்கு வந்து பத்து நாட்களுக்குள் பரிசம் போட்டு பதினைந்து வயதுக்குள் ஒரு குழந்தைக்கு தாயாக்கும் வழக்கமெல்லாம் மலையேறி விட்டது. கிராமத்துப் பெண்கள் டவுன் பஸ் பிடித்து நகரத்திற்கு வந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள்.
கடைகளில், அலுவலகங்களில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். பாவாடை - தாவணி காணாமல் போய் அதை பாரதிராஜாவின் பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. சுடிதார், நைட்டி போன்ற நகரத்து சமாச்சாரங்கள் கிராமங்களிலும் நுழைந்து பல காலமாகி விட்டது. வயல் வரப்பில் நின்று கொண்டு செல்போனில் புண்ணாக்கு விலை விசாரிக்கிறார்கள்.
சிறு நகரங்களில் ஒன்றுக்கு நான்காக கம்ப்யூட்டர் கற்றுத் தரும் மையங்கள் இயங்குகின்றன. பள்ளித் தேர்வின் முடிவுகளை இண்ட்டெர்நெட் மையங்களுக்கு வந்து பார்க்கிறார்கள். திருமணம் என்றால் மணமகளை அழகு நிலையத்திற்கு அனுப்பி அலங்கரிக்கிறார்கள். நகரத்தின் எந்த சௌகரியங்களும் கிராமங்களை நோக்கி துரிதமாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால்....
இன்றைக்கும் பெரும்பாலான கிராம மனிதர்களின் மனங்கள் அசுத்தமாகாமல் விருந்தோம்பலும், அன்பும், கருணையும், இரக்கமும், மனிதாபிமானமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. இவையனைத்தும் நகரத்து மனிதர்களின் மனங்களில் குறைந்து கொண்டிருப்பது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இந்த கிராம, நகர மனங்களின் வேறுபாட்டுச் சிதறல்களை ஒரே கதையில் பதிவு செய்ய விரும்பி எழுதியதே இந்த நாவல்.
கிராமத்தில் வேர்களை வைத்துக் கொண்டு கிளை பரப்ப நகரத்திற்கு கல்லூரிப் படிப்புக்காக வருகிற ஒரு மாணவ இளைஞனே இதில் நாயகன். கல்லூரியை பின்னணி களமாகக் கொண்டிருந்தாலும் கிராமத்து காதல் நகரத்து காமம் என்று வேறுபட்ட விஷயங்களைச் சந்திக்கிற அவன் மன உணர்வுகளில் எனது உணர்வுகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. ஏனென்றால் பட்டுக்கோட்டை என்கிற சிறிய நகரத்திலிருந்து சென்னை என்கிற பெரிய நகரத்திற்கு கலை உலக வாழ்க்கைக்காக வந்தவன்தானே நானும்?
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
الرواية
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
இன்றைய தேதியில் தமிழகத்தின் கிராமத்திற்கும் பெரிய நகரத்திற்குமான நாகரிக இடைவெளி வெகுவாக குறைந்து போயிருக்கிறது. கிராமங்களில் வயதுக்கு வந்து பத்து நாட்களுக்குள் பரிசம் போட்டு பதினைந்து வயதுக்குள் ஒரு குழந்தைக்கு தாயாக்கும் வழக்கமெல்லாம் மலையேறி விட்டது. கிராமத்துப் பெண்கள் டவுன் பஸ் பிடித்து நகரத்திற்கு வந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள்.
கடைகளில், அலுவலகங்களில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். பாவாடை - தாவணி காணாமல் போய் அதை பாரதிராஜாவின் பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. சுடிதார், நைட்டி போன்ற நகரத்து சமாச்சாரங்கள் கிராமங்களிலும் நுழைந்து பல காலமாகி விட்டது. வயல் வரப்பில் நின்று கொண்டு செல்போனில் புண்ணாக்கு விலை விசாரிக்கிறார்கள்.
சிறு நகரங்களில் ஒன்றுக்கு நான்காக கம்ப்யூட்டர் கற்றுத் தரும் மையங்கள் இயங்குகின்றன. பள்ளித் தேர்வின் முடிவுகளை இண்ட்டெர்நெட் மையங்களுக்கு வந்து பார்க்கிறார்கள். திருமணம் என்றால் மணமகளை அழகு நிலையத்திற்கு அனுப்பி அலங்கரிக்கிறார்கள். நகரத்தின் எந்த சௌகரியங்களும் கிராமங்களை நோக்கி துரிதமாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால்....
இன்றைக்கும் பெரும்பாலான கிராம மனிதர்களின் மனங்கள் அசுத்தமாகாமல் விருந்தோம்பலும், அன்பும், கருணையும், இரக்கமும், மனிதாபிமானமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. இவையனைத்தும் நகரத்து மனிதர்களின் மனங்களில் குறைந்து கொண்டிருப்பது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இந்த கிராம, நகர மனங்களின் வேறுபாட்டுச் சிதறல்களை ஒரே கதையில் பதிவு செய்ய விரும்பி எழுதியதே இந்த நாவல்.
கிராமத்தில் வேர்களை வைத்துக் கொண்டு கிளை பரப்ப நகரத்திற்கு கல்லூரிப் படிப்புக்காக வருகிற ஒரு மாணவ இளைஞனே இதில் நாயகன். கல்லூரியை பின்னணி களமாகக் கொண்டிருந்தாலும் கிராமத்து காதல் நகரத்து காமம் என்று வேறுபட்ட விஷயங்களைச் சந்திக்கிற அவன் மன உணர்வுகளில் எனது உணர்வுகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. ஏனென்றால் பட்டுக்கோட்டை என்கிற சிறிய நகரத்திலிருந்து சென்னை என்கிற பெரிய நகரத்திற்கு கலை உலக வாழ்க்கைக்காக வந்தவன்தானே நானும்?
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة