القصص
அன்பு மனைவி ஆசையுடன் மேசைமீது வைத்த ஆவி பறக்கும் தேநீரை, இரு பிஸ்கெட்டுகளுடன் நிதானமாக, ருசித்துச் சாப்பிட இன்ஸ்பெக்டர் இருதயராஜ், லத்தியை மேசைமீது வைத்து தொப்பியைக் கழற்றுகிறார். கோப்பையில் தேநீர் எடுத்து உதட்டில் வைக்கும் பொழுது டெலிபோன் மணி அடிக்கிறது. எடுக்கிறார். செவியருகில் வைக்கிறார். குரலில் கடுமையுடன், “எந்த ஏரியா?” கேட்கிறார். “மைலாப்பூர் கபாலி தியேட்டர் அருகே...” டொக்.
அவசரமாகத் தேநீர்க் கோப்பையை மேசைமீது வைக்கிறார். தேநீர் தளும்பி, சாஸரில் விழுகிறது. லத்தியையும், தொப்பியையும் எடுத்துக் கொள்கிறார். மோட்டார் பைக் சாவியை மனைவி தர, கிளம்பி விடுகிறார். 'ம்... அவ்வளவுதானா என்று தேநீரும், பிஸ்கெட்டுகளும் பேசிக் கொள்கின்றன!’
மனைவி யந்திரத்தனமாக தேநீர் கோப்பையும், பிஸ்கெட்டுகளையும் எடுக்கிறார்! அவருக்கு அது தினமும் நடக்கும் சமாசாரம்.
ஆனால் படிக்கும் வாசகனுக்கு?
'என்ன ஆச்சு? கபாலி தியேட்டர் அருகே கொலையா, தீ விபத்தா, ரவுடிகளின் அட்டகாசமா, பெண்கள் சமாசாரமா?’
மேலே தொடர்ந்து படித்து, கதையின் இறுதியில்
இப்படி திக் திக் என்று வாசகன் மனதில் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் சிறுகதைகளை எழுதிப்பார்க்க ஆசைப்பட்டேன் விளைவு இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்!
- பாமா கோபாலன்
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
القصص
அன்பு மனைவி ஆசையுடன் மேசைமீது வைத்த ஆவி பறக்கும் தேநீரை, இரு பிஸ்கெட்டுகளுடன் நிதானமாக, ருசித்துச் சாப்பிட இன்ஸ்பெக்டர் இருதயராஜ், லத்தியை மேசைமீது வைத்து தொப்பியைக் கழற்றுகிறார். கோப்பையில் தேநீர் எடுத்து உதட்டில் வைக்கும் பொழுது டெலிபோன் மணி அடிக்கிறது. எடுக்கிறார். செவியருகில் வைக்கிறார். குரலில் கடுமையுடன், “எந்த ஏரியா?” கேட்கிறார். “மைலாப்பூர் கபாலி தியேட்டர் அருகே...” டொக்.
அவசரமாகத் தேநீர்க் கோப்பையை மேசைமீது வைக்கிறார். தேநீர் தளும்பி, சாஸரில் விழுகிறது. லத்தியையும், தொப்பியையும் எடுத்துக் கொள்கிறார். மோட்டார் பைக் சாவியை மனைவி தர, கிளம்பி விடுகிறார். 'ம்... அவ்வளவுதானா என்று தேநீரும், பிஸ்கெட்டுகளும் பேசிக் கொள்கின்றன!’
மனைவி யந்திரத்தனமாக தேநீர் கோப்பையும், பிஸ்கெட்டுகளையும் எடுக்கிறார்! அவருக்கு அது தினமும் நடக்கும் சமாசாரம்.
ஆனால் படிக்கும் வாசகனுக்கு?
'என்ன ஆச்சு? கபாலி தியேட்டர் அருகே கொலையா, தீ விபத்தா, ரவுடிகளின் அட்டகாசமா, பெண்கள் சமாசாரமா?’
மேலே தொடர்ந்து படித்து, கதையின் இறுதியில்
இப்படி திக் திக் என்று வாசகன் மனதில் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் சிறுகதைகளை எழுதிப்பார்க்க ஆசைப்பட்டேன் விளைவு இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்!
- பாமா கோபாலன்
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة