أدب الجريمة
ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, ஒவ்வொன்றிற்கும் ஒரு சிக்கலை உருவாக்கி, அந்தச் சிக்கலை சிறிதளவு கூட சிக்கல் இல்லாமல் சிக்கலைத் தீர்த்து வைக்கும் பாணியே தனி.
வடுவூராரின் கதாபாத்திர படைப்புகளில் திகம்பரசாமியாரின் படைப்பு மிக மிக அபாரமானது; பிரசித்தி பெற்றது. திகம்பர சாமியார் என்ற திரைப்படம் வெளிவந்து நூறு நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக அந்நாளில் ஓடியது என்றால் இதன் பிரசித்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.
மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ‘திகம்பர சாமியார்’ இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.
تاريخ الإصدار
كتاب : 2 يوليو 2020
أدب الجريمة
ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, ஒவ்வொன்றிற்கும் ஒரு சிக்கலை உருவாக்கி, அந்தச் சிக்கலை சிறிதளவு கூட சிக்கல் இல்லாமல் சிக்கலைத் தீர்த்து வைக்கும் பாணியே தனி.
வடுவூராரின் கதாபாத்திர படைப்புகளில் திகம்பரசாமியாரின் படைப்பு மிக மிக அபாரமானது; பிரசித்தி பெற்றது. திகம்பர சாமியார் என்ற திரைப்படம் வெளிவந்து நூறு நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக அந்நாளில் ஓடியது என்றால் இதன் பிரசித்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.
மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ‘திகம்பர சாமியார்’ இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.
تاريخ الإصدار
كتاب : 2 يوليو 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة