خطوة إلى عالم لا حدود له من القصص
الخيال العلمي
நாடோடிகள்’ சரியாகப் போகவில்லை! பாஸ்கி இயக்கும்போதே, நாடோடிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது. ஜனா இயக்கத்துக்கு வந்த பிறகு இன்னும் மோசமானது! தயாரிப்பாளர் அதை நிறுத்திவிட்டு வேறு தொடரை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஜனா, முருகன் இருவரையும் அழைத்தார். “கைல எவ்ளோ எபிசோட் இருக்கு?” “ஷூட் பண்ணினது அஞ்சு இருக்கு சார்!” “இன்னும் ஒரு பத்து எபிசோட்ல முடிச்சுக்குங்க!” “சார்! கதைல இனிமேதான் ஒரு முக்கியமான திருப்பம் வரப்போகுது!” முருகன் சொன்னான். “போதும் முருகன். என்ன பொல்லாத திருப்பம்? ஆரம்பம் முதலே உங்க சொந்தக் கற்பனை எதுவும் இல்லை. ‘நட்சத்திரம்’ ஜெயிச்சப்ப, அதுலேயிருந்து நிறைய காட்சிகளை உருவி இதுல போட்டீங்க. காப்பியடிக்கறதைத் தவிர, உருப்படியா என்ன செஞ்சீங்க?” முருகனின் முகம் இருண்டது! “இங்கே வேலைக்குச் சேர்ந்த புதுசுல நீங்களும் பாஸ்கியும் மாறி மாறி துரை சாரைக் குறை சொன்னீங்க. அவருக்கு எந்தத் திறமையும் இல்லை. ‘நட்சத்திரம்’ வெற்றிக்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்னு வாய் கூசாம பொய் சொன்னீங்க. பாலமுருகன் டைரக்ஷன்ல துரைசார் எழுதி ‘நட்சத்திரம்’ கடைசிவரைக்கும் நல்லாத்தான் போச்சு! இப்ப வேற கம்பெனிக்கு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்றாங்க. அதுக்கும் நல்ல பேரு. மத்தவங்களைப் போட்டுக் குடுக்கறதை தவிர, உங்களுக்கு என்ன தெரியும்?“....!” “பத்து எபிசோட்ல முடிச்சிட்டு, எடத்தைக் காலி பண்ணுங்க.” இருவரும் எழுந்தார்கள். “எப்பவுமே நம்ம உழைப்புல, திறமைல வாழணும்! மத்தவங்களை நாசப்படுத்திட்டு வாழற நம்ம வாழ்க்கை நிலைக்காது முருகன்! புரிஞ்சுக்குங்க!” அவர் எழுந்து போய்விட்டார். இருவரும் வெளியே வந்தார்கள். “ரொம்பத் தொங்குதுங்க! நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா எழுதினா, இந்தத் தொடரை நிறுத்த வேண்டிய நிலைமை வந்திருக்காது!” ஜனா ஆரம்பித்தான். முருகனுக்கு சுருக்கென வந்துவிட்டது. கண்ணாடியை இறக்கிக்கொண்டு பார்த்தான். “என் எழுத்தை விமர்சனம் பண்ற தகுதி இங்கே எந்த நாய்க்கும் இல்லை!” “இதப் பாருங்க முருகன். மரியாதையாப் பேசுங்க!” “உனக்கென்ன மரியாதை ஜனா?” “நான் ‘நாடோடிகள்’ டைரக்டர்.” முருகன் சிரித்தான். “என்ன சிரிப்பு?” “பாஸ்கியைக் கவுத்துட்டு, நீ டைரக்டர் ஆயிட்டே! அதுவும் நிலைக்கலை பாரு! அடுத்தவங்களைக் கவுத்தா, இந்த நிலைமைதான்!” “நீங்க மட்டும் என்ன யோக்யம்? துரை சாரை நீங்க கவுக்கப் பாத்தீங்க! இப்ப உங்க கதி என்ன?எங்கிட்ட பேனா இருக்குடா!” “அதுல இங்க் இருக்கானு முதல்ல பாருங்க. துரை சாருக்கு பத்தாம் தேதி சம்பளம் தருவாங்க கம்பெனில. ஆனா உங்களுக்கு ஒண்ணாம் தேதி அவர் செக் தருவார். துணிமணி, கேட்டப்ப கடன், நல்ல ஓட்டல்ல சாப்பாடுனு சொந்தத் தம்பி மாதிரி அவர் உங்களை வச்சிருந்தார். பாஸ்கியையும், துரை சாரையும் பிரிச்சீங்க! சத்யமா நீங்க உருப்படப் போறதில்லை! நாசமாத்தான் போவீங்க!” “சாபம் விடறியாடா?” “விடாம? நான் தனிமனுஷன். நீங்கள்ளாம் குடும்பஸ்தன். பொண்டாட்டி கையால செருப்படி பட்டு தெருவுக்கு வரணும்யா நீ! ஆனா நீ மாமா வேலை செஞ்சாவது பொழைச்சுப்பே! உனக்கு ஏது மான, ரோஷம்?” முருகனுக்கு ஆத்திரம் உச்சந்தலைக்கு வந்துவிட்டது! ஆனால் பேச முடியாது! ‘துரை நாக·கமானவர். ஓரளவுக்கு எதையும் பொறுத்துக்கொள்வார்!’ இந்த ஜனாவெல்லாம் பொறுக்கிக்கூட்டம்! சாக்கடையில் கல் எறிவதைப் போலதான் இவர்களிடம் பேசுவது! “நீ எதுக்குடா இத்தனை காலம் பாஸ்கிகிட்ட ஜால்ரா போட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டிருந்தே? உன் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் கேட்டிருந்தே! கொடுக்கலியோ?” “தேவையில்லை. இந்த இருபது எபிசோட்ல எனக்கு டைரக்டர் சம்பளம்தானே? அதுபோதும். பாஸ்கியை நம்பியா நான் பொறந்தேன்? அந்தக் குடிகாரனை நம்பி, அவன் பொண்டாட்டியே வாழ முடியாதே! மத்தவங்க எப்படி? சரி சரி மீதியை எழுதிக்குடுத்துட்டு நடையைக் கட்டுங்க! “நான் இப்ப காளிகாம்பா கோயிலுக்குப் போறேன்!
© 2024 Pocket Books (كتاب ): 6610000511013
تاريخ الإصدار
كتاب : 16 يناير 2024
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة