10 of 16
كتب واقعية
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.
ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பத்தாம் தொகுதியாக 701 முதல் 778 வரையிலான 78 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் மாடம்பாக்கம் கோடை நகர் திருப்போரூர் உத்திரமேரூர் மதுராந்தகம் சேயூர் திருவக்கரை சிறுவை திருவாமூத்தூர் தச்சூர் திருக்கோவலூர் கோவனூர் திருவதிகை திருவாமூர் வடுகூர் திருத்துறையூர் திருநாவலூர் திருவெண்ணெய்நல்லூர் திருப்பாதிரிப்புலியூர் திருமாணிகுழி திருவேட்களம் திரு நெல்வாயில் விருத்தாசலம் வேப்பூர் நிம்பபுரம் வேப்பஞ்சந்தி திருக்கூடலையாற்றூர் கடம்பூர் திருவரத்துறை யாழ்ப்பாணாயன்பட்டினம் ஸ்ரீமுஷ்டம் திருநல்லூர் திருமயேந்திரம் சீகாழி கரியவனகர் தலங்களில் பாடப்பட்டவை.
© 2023 Ramani Audio Books (دفتر الصوت ): 9798868725005
تاريخ الإصدار
دفتر الصوت : 14 سبتمبر 2023
10 of 16
كتب واقعية
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.
ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பத்தாம் தொகுதியாக 701 முதல் 778 வரையிலான 78 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் மாடம்பாக்கம் கோடை நகர் திருப்போரூர் உத்திரமேரூர் மதுராந்தகம் சேயூர் திருவக்கரை சிறுவை திருவாமூத்தூர் தச்சூர் திருக்கோவலூர் கோவனூர் திருவதிகை திருவாமூர் வடுகூர் திருத்துறையூர் திருநாவலூர் திருவெண்ணெய்நல்லூர் திருப்பாதிரிப்புலியூர் திருமாணிகுழி திருவேட்களம் திரு நெல்வாயில் விருத்தாசலம் வேப்பூர் நிம்பபுரம் வேப்பஞ்சந்தி திருக்கூடலையாற்றூர் கடம்பூர் திருவரத்துறை யாழ்ப்பாணாயன்பட்டினம் ஸ்ரீமுஷ்டம் திருநல்லூர் திருமயேந்திரம் சீகாழி கரியவனகர் தலங்களில் பாடப்பட்டவை.
© 2023 Ramani Audio Books (دفتر الصوت ): 9798868725005
تاريخ الإصدار
دفتر الصوت : 14 سبتمبر 2023
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة