5
تطوير الذات
2015, சென்னைப் புத்தகக் காட்சியில், 'நீ அசாதாரணமானவன்' என்ற தலைப்பில் பேசினேன். அந்தப் பேச்சின் இறுதியில் நான் சொன்ன தகவலின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அங்கே சொன்ன தகவல் என்ன?
வெளிநாட்டில் வேலை கிடைத்துப்போன ஒருவன், விடுப்பில் திரும்பி வந்தபோது, மொத்தம் மூன்று ஸ்மார்ட் போன்கள் வாங்கி வந்தான். ஒன்றை அம்மாவிடமும் மற்றொன்றை அப்பாவிடமும் கொடுத்தான். மூன்றாவது மொபைல் போனை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனது தம்பியிடம் கொடுத்தான். பின்பு விடுப்பு முடிந்து கிளம்பிப் போய்விட்டான்.
விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை மூவரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அவனுடைய அம்மாவின் போனில் அழைப்பு வந்தால், அவர் அதை விரலால் 'வழித்து விட்டு’ பேசுவார். எப்போதும் அதை மட்டுமே செய்தார். அவர் மகன் அடுத்த விடுப்பில் திரும்பி வரும்வரை!
அவனுடைய அப்பா கொஞ்சம் மேல். அழைப்பு வந்தால் எடுப்பார். தவிர, தேவைப்பட்டால் அந்த போனின் 'கான்டாக்ட்ஸ்' பகுதிக்குச் சென்று, பேச விரும்பும் நபரின் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பார், பேசுவார். மேலும் புதிய எண்களைப் பதிவு செய்து கொள்வார். ஆக, தன்னுடைய மனைவி பயன்படுத்தியதைக் காட்டிலும், அந்த ஸ்மார்ட் போனை சற்று கூடுதலாகப் பயன்படுத்தினார்.
மூன்றாவதாக, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனுடைய தம்பி. அவன் வேண்டியவர்களை போனில் அழைப்பது, வரும் அழைப்பை ஏற்பது, பாட்டுக் கேட்பது, ஒலிப்பதிவு செய்வது, பதிவுகளைக் கேட்பது, படங்கள் எடுப்பது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தி படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் அனுப்புவது பெறுவது. ஸ்கைப் பயன்படுத்துவது, கூகுள் மேப்ஸ் பார்ப்பது. பேஸ் டைமில் தொடர்பு கொள்வது, மின்னஞ்சல்கள் பரிமாற்றம், அலாரம் பயன்படுத்துவது, அப்பாவின் தேவைகளுக்காக நெட் பேங்கிங் என்று அந்த போனில் சுமார் பதினெட்டுக்கும் அதிகமான அம்சங்களைப் பயன்படுத்தினான். அண்ணன் வரும் போது, அந்த போனுக்கும் அடுத்த மாடல் போன் வாங்கி வரும்படி கேட்கிறான்.
மூவருக்கும் கொடுக்கப்பட்டது ஒரே மாதிரியான போன். ஒரே விலை. போன்களில் இருந்த அம்சங்களிலும் வேறுபாடுகள் கிடையாது. மூவருக்குமே அந்த போனை வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பும் அனுமதியும் இருந்தது. ஆனால், பயன்படுத்திய விதங்களிலும் பயனடைந்த அளவுகளிலும் மூவருக்குள்ளும் பெரிய வேறுபாடுகள்.
இது யார் குற்றம். போனின் குற்றமா... கொடுத்தவனின் குற்றமா?
பயன்படுத்துபவரின் குற்றம் தானே தவிர, வேறு யாருடைய தவறும் இல்லை. இது போலத்தான், மனிதர்களின் வேறுபாடுகளும் மனிதர்களிடம் இருக்கும் மூளை என்ற இயந்திரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே உருவாக்கம் (மேக்)தான். ஆனாலும், செயல்பாடுகளிலும் சாதனைகளிலும் வித்தியாசம் உண்டு. காரணம், மொபைல் போனில் பார்த்த அதே விஷயம்தான்.
மூளையைப் பயன்படுத்தும் விதங்களில் வேறுபடுகிறோம். திறன் படைத்திருப்பதில் யாரும் எவருக்கும் குறைந்தவரில்லை. படைத்தவன் ஒரே மாதிரியாகத்தான் படைத்து அனுப்பியிருக்கிறான். ஆக, எல்லோரும் ஒன்றுதான். முயன்றால் எல்லோரும் வல்லவராகிவிட முடியும். ஆனால், அது எப்படி? எங்கே சிலர் தவறவிடுகிறார்கள்? எதனால் சிலர் சாதிக்காதவர்களாகவே போய்விடுகிறார்கள்?
- சோம. வள்ளியப்பன்
21.12.2015
writersomavalliappan@gmail.com
تاريخ النشر
كتاب إلكتروني: 15 سبتمبر 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت