القصص
இத் தொகுதியை, இரண்டாம் பதிப்பில், ஏறக்குறைய முப்பத்தி எட்டு வருட இடைவேளைக்குப் பிறகு காண்கையில், பெருமிதம் உள்பொங்கும் அதேசமயம், லேசான விசனமும் ஏடு படர்கிறது.
இதில் அடங்கியிருக்கும் கதைகள், தொகுதிக்கும் முன் ஐந்தாறு வருடங்களில் எழுதப்பட்டவை. ஆகவே இவைகள் ஒவ்வொன்றுக்கும் நாற்பது வயது தாண்டியதே. மனிதனின் இன்றைய சராசரி வயதில் பாதிக்கு மேலானவை, என் குழந்தைகள். ஆனால் நீங்கள் வளர்த்தவை: இவை குழந்தைகளில்லை. பெற்ற ஆர்வத்தில் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்ளலாம்.
அப்படித்தான் இப்போது பார்க்கிறேன்.
எழுத்தாளனுக்குத் தாயகம் இருக்கலாம், ஆனால் எழுத்துக்குக் கிடையாது, எழுத்து ஒரு எடுப்பார் கைப் பிள்ளை என்று வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன்.
எங்கெங்கோ, எப்படியெப்படியோ வளர்ந்தாலும் இவை நோஞ்சான்களல்ல. நன்றாக செழிப்பாகவே, தாமாவே வளர்ந்திருக்கின்றன. இல்லாவிடில் ‘கங்கா', ‘குருக்ஷேத்ரம்’, ‘கஸ்தூரி', ‘விடிவெள்ளி', 'தீக்குளி' என்று இவை இன்னும் பேசப்படுமா? ‘சொல்' எனும் முன்னுரை தன் வழியில் தனி பிரசித்தி அடைந்துவிட்டது - வேண்டாம், இனியுமா சுயபுராணம், இனியுமா இவைகளுக்கு என் அரவணைப்பு?
ஆனால் ஒன்று. ஒரு குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் எங்கெங்கு சிதறியிருந்தாலும், ஒரு விசேஷ தினத்தன்று - தீபாவளி, வருடப்பிறப்பு, வீட்டுப் பெரியவனுக்கு ஏதோ விழாவென்று குடும்பம் ஒன்று கூடும்போது அந்த மறு சந்திப்பின் மகிழ்ச்சியே தனிதான். குழந்தைகள் வருகிறார்கள். அணைக்க இருகைகள் போதவில்லையே! ஏடுகளிடையே அமுக்கி வைத்திருந்த தாழம் பூவின் மணம் கமகமக்கிறது. குழ. கதிரேசன் இந்தச் சமயத்தை ஏற்படுத்தி அதன் மஹிமையைத் தட்டிக் கொண்டு போய் விட்டார். அதுவும் சரிதான். ஸாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் இந்தச் சமயத்தில், இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறேன்.
எல்லாரும் பண்டிகையில் பங்குகொள்ள வாருங்கள் நீங்கள் வளர்த்த குழந்தைகள்.
-லா. ச. ராமாமிருதம்
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
القصص
இத் தொகுதியை, இரண்டாம் பதிப்பில், ஏறக்குறைய முப்பத்தி எட்டு வருட இடைவேளைக்குப் பிறகு காண்கையில், பெருமிதம் உள்பொங்கும் அதேசமயம், லேசான விசனமும் ஏடு படர்கிறது.
இதில் அடங்கியிருக்கும் கதைகள், தொகுதிக்கும் முன் ஐந்தாறு வருடங்களில் எழுதப்பட்டவை. ஆகவே இவைகள் ஒவ்வொன்றுக்கும் நாற்பது வயது தாண்டியதே. மனிதனின் இன்றைய சராசரி வயதில் பாதிக்கு மேலானவை, என் குழந்தைகள். ஆனால் நீங்கள் வளர்த்தவை: இவை குழந்தைகளில்லை. பெற்ற ஆர்வத்தில் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்ளலாம்.
அப்படித்தான் இப்போது பார்க்கிறேன்.
எழுத்தாளனுக்குத் தாயகம் இருக்கலாம், ஆனால் எழுத்துக்குக் கிடையாது, எழுத்து ஒரு எடுப்பார் கைப் பிள்ளை என்று வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன்.
எங்கெங்கோ, எப்படியெப்படியோ வளர்ந்தாலும் இவை நோஞ்சான்களல்ல. நன்றாக செழிப்பாகவே, தாமாவே வளர்ந்திருக்கின்றன. இல்லாவிடில் ‘கங்கா', ‘குருக்ஷேத்ரம்’, ‘கஸ்தூரி', ‘விடிவெள்ளி', 'தீக்குளி' என்று இவை இன்னும் பேசப்படுமா? ‘சொல்' எனும் முன்னுரை தன் வழியில் தனி பிரசித்தி அடைந்துவிட்டது - வேண்டாம், இனியுமா சுயபுராணம், இனியுமா இவைகளுக்கு என் அரவணைப்பு?
ஆனால் ஒன்று. ஒரு குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் எங்கெங்கு சிதறியிருந்தாலும், ஒரு விசேஷ தினத்தன்று - தீபாவளி, வருடப்பிறப்பு, வீட்டுப் பெரியவனுக்கு ஏதோ விழாவென்று குடும்பம் ஒன்று கூடும்போது அந்த மறு சந்திப்பின் மகிழ்ச்சியே தனிதான். குழந்தைகள் வருகிறார்கள். அணைக்க இருகைகள் போதவில்லையே! ஏடுகளிடையே அமுக்கி வைத்திருந்த தாழம் பூவின் மணம் கமகமக்கிறது. குழ. கதிரேசன் இந்தச் சமயத்தை ஏற்படுத்தி அதன் மஹிமையைத் தட்டிக் கொண்டு போய் விட்டார். அதுவும் சரிதான். ஸாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் இந்தச் சமயத்தில், இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறேன்.
எல்லாரும் பண்டிகையில் பங்குகொள்ள வாருங்கள் நீங்கள் வளர்த்த குழந்தைகள்.
-லா. ச. ராமாமிருதம்
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة