1 من 60
كتب واقعية
படைப்பாளி நிஜம்; படைப்பாளியோடு வாசகனும் நிஜம். மொழியின் முப்பரிமாணத்தன்மைதான் படைப்பு. அது காட்டும் மாயத்தோற்றத்தை ஒன்றிணைத்து காண்பதுதான் கலை. முப்பட்டைக் கண்ணாடிச் சட்டகத்தை அசைப்பவனைப் பொறுத்தும் அசைபடும் பொருட்களைப் பொறுத்தும் தோற்றம் விசித்திரம் தருகிறது எனப் புரிந்துள்ளவர்கள் கலையின் பயன்பாடு குறித்து அக்கறைப்படுவதில்லை. அது ஒரு மொழி விளையாட்டு என்று தெரிந்தே ஈடுபடுகிறார்கள்.
மொழியின் தொடர்ச்சியிலிருந்து ஒரு ‘பிடுங்கல்’. அவளது ஒரு தேர்ந்தெடுப்பைப் படைப்பாளி புத்தகமாக்குகிறான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். எந்திரமயமான வாழ்வில் மொழியை மட்டும் உணர்வுத் தளத்தில் வைப்பது, படைப்பாளியானவன் தப்பித்து உன்னத நிலையை அடையவும் படைப்புரிமை கோரவும் வைக்கிறது. ஓர் இயங்கும் புத்தகம் தனது அமைப்பினுள் பல உதிரிபாகங்களை இணைத்துக் கொள்கிறது. அதை மறைத்து, படைப்பாளி பெயரிட்டு விடுவதால் தன்னையும் மறைத்துக் கொள்பவனாகிறான் பெயரிட்டவனையே கலைத்துப் போடும் முதல் உரிமையோடு ஓர் இயங்கும் புத்தகமானது வாசகன் வசப்படுகிறது. ஏற்கெனவே படைப்பாளி கை வைத்ததால் மாறியிருக்கும் இதன் புதிர் அமைப்புகளை வாசகன் முற்றிலும் கலைத்துப் போட்டுக்கொள்ள முடியும் இப்போது அது செயலற்றுக் கிடக்கிறதா இல்லை மறைத்துக்கொண்டு இயங்குகிறதா என்பதெல்லாம் வாசகன் கையில் எடுத்தவுடன் மாறுகின்ற அதன் தோற்றத்தைப் பொறுத்தது. எப்படி ஒரு புத்தகத்துக்கு ஒரு படைப்பாளி இல்லையோ அதைப் போலவே எந்தப் புத்தகத்துக்கும் ஓர் ஒற்றை வாசிப்பு இல்லை என்றாகிறது.
அடுக்கடுக்காகப் படைப்புகள் வருகின்றன. அத்தனை புத்தகமாக்கலுக்குப் பின்பும் மொழியானது தனித்தனி எழுத்து அலகுகளாக மீண்டுகொள்வதைப்போல் அத்தனை வாசிப்பிற்குப் பின்பும் அது மீண்டுகொள்கிறது. ஆக துவக்குபவன், துலங்குபவன், மறைத்துக் கொண்டவன், வெளிப்பட்டவன், முடித்து வைப்பவன், அவிழ்பவன், மீட்பவன், மாற்றுபவன், இணைபவன், மறுபடைப்புச் செய்கிறவன் என ஒரு புத்தகமானது பல தன்னிலைகளால் படைப்பாளியின் பிரக்ஞைக்குட்பட்டே ஓர் அமைப்பினுள் கட்டப்படுகிறது வாசிக்கப்படும் கணத்தின் புதிர் தன்மையோடும் அல்லது முற்றிலும் மறுதலித்துவிடக்கூடிய வாய்ப்போடும் ஒரு பிரதியானது சுட்டப்பட்டவனின் ஆளுமையோடு எதிர்நிற்பதுதான் அரசியலாகிறது. இது கணநேரம் தன்னிலை முன்னிலை சிக்கலாகத் தோன்றி, படைப்பாளி – வாசகன் என்ற இருமை அமைப்பிற்குள் முரண் இயக்கம் துவங்குகிறது.
இந்த முரண் இயக்கம் மூன்றாம் உலக அடிமைகள் கலாச்சாரத்தில் முற்றிலும் செயற்கையாகத் திணிக்கப்பட்டது. உண்மையில் ஒரு வாசகன் எத்தனையாவது சுற்றில் ஒரு படைப்பாளிச் செயல்பாட்டை நேர் இணக்கமாகச் சந்திக்கிறான் என்பதைப் பொறுத்து அவ்விருமையின் விருப்புறுதி, விளைவுறுதி பரிவர்த்தனை செய்துகொள்ளப்படுகிறது. அது மீண்டும் எதிரிணை இயக்கங்களாக பன்மைப்பட்டுக் கொண்டாலும் அது ஒரு பொது எதிரியை எல்லாத் தளங்களிலும் குலைப்பதாகவே இருக்கும். நகர்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தில் படைப்பாளியின் செயல்பாட்டை ‘ஒளிவட்டம்’ என ஒற்றைத் தளத்தில் பார்ப்பது கவனக்குறைவானது. உலகம் ஒற்றையடிப் பாதையல்ல அவன் சொற்படியே இந்த உலகமே பின்பற்றுவதற்குப் படைப்பாளி கடவுளுமல்ல. அவனின் ஆளுமைக்கும் அதிகாரத்திற்கும் துல்லியமான வேறுபாடு இருக்கிறது. அவன் ஆளுமையைச் சகிக்க வொட்டாமல் புறத்தே தன்னைப் போலவே இருக்கும். அவனை மீண்டும் அடிமை நிலைக்கு இழுத்துக் கொண்டுவிடுவது வாசக மறுபடைப்பாக இருக்கிறது. என்ன செய்ய! வாழ்ந்து முடிந்த வரலாற்றையே மறுபடியும் வாழ நிகழ்வது அடிமைகளின் தவிர்க்கவியலா அறமும் தர்மமும் ஆகிறது.
உண்மையில் அடிமைகளின் கலாச்சாரத்தில் வாசிப்பு முதன்மையானது என்பது படைப்பாளியின் மரணத்தைத் தள்ளிப்போடுவதில் இருக்கிறது. படைப்பாளி இறந்தாலும் கடவுள் இறக்கப் போவதில்லை. மூன்றாம் உலகங்களில் அவர் தெருக்களில் திரிகிறார். படைப்பாளியின் செயல்பாட்டால் வாசகனை அச்சுறுத்தியும் வாசக மறுபடைப்பால் படைப்பாளியை மரணமடைய வைத்தும் ஒற்றனாக, தூதனாக, முகவராக இன்னும் பலவாகத் தெருக்களில் திரிகிறார். இதற்கிடையேதான் படைப்பாளியின் செயல்பாடு என்பது நகர்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தில் எதையும் இழக்காமல் பெற முனையும் வாசகத் தீர்மானமாகவும் அவனது அனுபவமாகவும் பதற்றமுறுகிறது. பங்கேற்று ஊடுருவுகிறது.
تاريخ النشر
كتاب إلكتروني: 28 أغسطس 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت