الرواية
கல்கி அவர்கள் மறைந்து. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் ஆன பிறகும் கல்கியின் எழுத்துக்கள் புத்தம் புதியனவாகவே படிப்போருக்குத் தோன்றுகின்றன. கதைகள், நாவல்கள் ஒருபுறம் வாசகர்களைத் தலைமுறை தலைமுறையாகக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தாலும், கட்டுரைகளில் அவருடைய தனித்தன்மை என்றைக்கும் சுவையுடையதாகவே இருந்து வருகிறது.
இந்தத் தொகுப்பில் 'கர்நாடகம்' என்ற புனைபெயரில் கல்கி அவர்கள் எழுதி வந்த பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 'ஆடல் பாடல்' என்ற தலைப்பில் கல்கி அவர்கள் சங்கீத விமர்சனங்களை எழுதியதோடு, சினிமா, நாடக விமர்சனங்களையும் எழுதியிருக்கிறார்.
எதை எழுதினாலும் எப்படியாவது கிச்சுக் கிச்சு மூட்டுகிற நகைச்சுவை வரிகள் அவற்றில் எங்காவது இடம் பெற்று விடும். இந்தத் தொகுப்பில் வெளியாகியுள்ள 'பிக் பாக்கெட்' காரனின் துரதிர்ஷ்டம் பற்றிய குறிப்பு அதற்கு ஓர் உதாரணம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 3 يناير 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت