'மந்திர புஷ்பம்' அதே சேலம் மாவட்ட கிராமங்களையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும், முற்றிலும் வேறான சூழ் நிலை ஒன்றை நம் கண் முன் விரிய வைக்கிறது.
சித்த சுவாதீனமில்லாத நர்மதாவுக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்கிறான் காசி. அவனுக்கு வித்தை ஏதும் சொல்லித் தராமல், தன் வீட்டு வேலைக்காரன் போலாக்கிவிட்டு உயிர் துறக்கிறார் சேஷாத்ரி இருந்தாலும் மன்த்தை நெருடவைக்கும்- நெகிழ வைக்கும் பாத்திரமாக இருக்கிறார் இவர்.
வைதீக வாழ்வு எவ்வளவு பின்னடைந்து போயுள்ளது என்னும் ஆதங்கத்தை இந்தக் கதையில் மகரிஷி துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
உற்றுழி உதவவேண்டிய உறவுகள் எப்படி அவசியமான தருணங்களில் உதறி ஒதுங்குகின்றன என்பது உருக்கமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்தக் கதையில்.
تاريخ النشر
كتاب إلكتروني: 3 يناير 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت