தொடுவானம் தன் அத்தை மகனை காதலிக்கும் இளமதி தாயாரின் கட்டாயத்தினால் மளிகை கடைக்காரன் ஒருவனை மணக்க நேர்கிறது.
கடமைக்காக வாழ்ந்து இரு குழந்தைகளுக்கு தாய் ஆகிறாள்.
அவளது தங்கை சுவாதிக்கும் அதுபோல கட்டாய திருமணத்தை அவளது தாய் செய்து வைக்க நினைக்கும் போது அதை தடுக்க அவளைக் காதலித்த அத்தை மகனிடமே அவளது தங்கையை அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளும்படி யாசகம் கேட்கிறாள்.
வாழ்க்கை யாரையும் வஞ்சித்ததே இல்லை தொடுவானம் என்பதை தொட்டு விடும் தூரம் தான் என்பதை வலியுறுத்தும் கதை இது.
அவளது வேண்டுகோளுக்காக அவளது தங்கையை அழைத்துக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்ளும் அவளது அத்தை மகனின் மனது அவளது தந்கையின் வசம் திரும்புகிறது. தொடுவானமாக இளமதிக்கும் அவளது அத்தை மகனுக்கும் இருந்த வாழ்க்கை வசப்படுகிறது. இளமதி காலம் கடந்து தன் கணவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்
تاريخ النشر
كتاب إلكتروني: 11 يناير 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت