خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
கவிதையின் மீதான ஆர்வம் சமீப காலமாக மேலோங்கி வருகிறது... கவிதைகளை உருவாக்கும் ஒவ்வொருவரையும் கவிஞர் என்றே சமூகம் போற்றி புகழ்கிறது.
கவிஞனால் கவிதையை உருவாக்கிட முடியும்... கவிஞனை எப்படி உருவாக்குவது? கவிஞன் என்பவன் உருவாக்கப் படக்கூடியவன் அல்ல, பிறவியிலேயே உருவெடுத்து வருபவன்... அதன் காரணமாகத்தான் சமூகத்தில் அவனுக்கென்று ஒரு தனி இடம் உள்ளது.
கவிதை எப்படி உருவெடுக்கிறது... அதனால் உலகிற்கு என்ன நன்மை உண்டாகிறது... என்ற கேள்விகளுக்கு பதில் தேடும்போது, உலக மகா கவிஞனாக நாம் போற்றி மதித்திடும் பாரதியின் ஒரு கவிதையே அதற்கு பதில் கூறுகிறது...
“உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்!”
என்று கவிதையைப்பற்றி பாரதி குறிப்பிட்டுள்ளார், உள்ளத்தில் உண்மை ஒளியை நாம் பெற்று விட்டால் நம் வாக்கினிலே ஒளியுண்டாகி வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும் நம்மிடமிருந்து தோன்றும் என்பது பாரதியின் வாக்கு.
கவிதைகள் பற்றி பலரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஆற்றல் மிக்க உணர்ச்சிகள் தாமாக பொங்கி வழிவதே கவிதை... என்கிறார் கவிஞர். வோர்ட்ஸ் ஒர்த்.
“கவிஞர் தம் உள்ளத்தில் தோன்றிய அரிய உண்மைகளை இன்ப வடிவமாகத் தெளிந்த மொழியில் வெளியிடுவது கவிதை... என்கிறார் கவிமணி.தேசிக விநாயகம்பிள்ளை.
“கால்வாய் இல்லாத இடத்தில் பெய்யும் ஒளி மழையே கவிதை... என்கிறார் கீட்ஸ்.
“கவிதை என்பது வார்த்தைகளில் இல்லை ஜீவனில் உறைவது... என்கிறார் லா.ச. ராமமிருதம்.
“மொழியும் எழுதுகிறவனின் மனமும் இணைந்து இயங்குகிற போதுதான் கவிதை பிறக்கிறது... என்கிறார் வண்ணநிலவன்.
இப்படி ஒவ்வொன்றாக ஒவ்வொருவர் சொன்னதையும் சொல்லிக்கொண்டே போகலாம். கவிதை என்பது கற்பவர் உள்ளத்தை ஈர்க்கும் சக்தியாக இருந்திட வேண்டும், சிறந்த லட்சியங்களை நம் மனக்கண்முன் சித்தரிப்பதாக இருந்திட வேண்டும். உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் வெளியிடுவதாக இருந்திட வேண்டும். கற்பனை என்பது ஒவ்வொரு கவிதைக்கும் உயிர் போன்றது, கற்பனையுடன் இருக்கும் கவிதையிலும் பொருளுடன் இருத்தலே கவிதைக்கு சிறப்பானது.
கவியாற்றல் பெற்றவராக இருப்பினும் கவிதையை தெளிவாக உரைத்தல் வேண்டும், அது வாசிப்பவருக்கு வழிகாட்டிடக் கூடியதாக இருந்திட வேண்டும் என்பதுடன், சமூக அவலங்களுக்கு எதிராக, அடிமைத்தனத்திற்கு எதிராக, ஏய்ப்போரும் இல்லாரும் இல்லாத உலகிற்கு வழிகாட்டுவதாகவும் இருந்திட வேண்டும்.
பெண்மையைப் போற்ற
வந்த பெருங்கவியே….!!!
பார் போற்றும்
தாய்மை சிறக்கவே
மாந்தர் பெருமைகளை
எடுத்துரைத்த கவிஞரே!!!!!…...
மடியினில் சுமப்பவளும்
கருவறையில் சுமந்தவளும்
பெண்ணே என
போற்ற வந்த பெருங்கவியே!!!!!!!!...
تاريخ النشر
كتاب إلكتروني: 12 أبريل 2025
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة