Step into an infinite world of stories
Fiction
“இந்தியா ஒரு புதிர். இந்தியா ஒரு தத்துவம். இந்தியா ஒரு முரண்பாடு”
காலங்காலமாக- கிரேக்க, பாரசீக, சீன யாத்ரிகர்களிலிருந்து இன்றைய மேற்கத்திய எழுத்தாளன் வரை தெரிவித்து வந்திருக்கும் கருத்து அது. சமகால இந்திய அறிவுஜீவிகளை அதன் பல எல்லைகளைத் தொடத் தூண்டும் கருத்து. அது அசாத்தியமான ஆசை, இந்தியாவின் பன்முகத்தன்மைக்குக் கரையோ எல்லையோ இல்லை. பல்லாயிரம் மொழிகள். பல்வேறு மரபுகள், பழக்க வழக்கங்கள், பல கோடி முரண்பட்ட கருத்துகள், பல கோடி வாதங்கள். விடாமல் கேள்விகள் எழுப்பும் நாடு. சந்தேகங்களை எழுப்பும் பாரம்பர்யம், ரிக்வேத காலத்திலிருந்து கடவுள் இருப்பைக் கேள்விக்குரிய வினாவாக்கியது அங்கேயே ஆரம்பித்துவிட்டது. கடவுள் என்று ஒருவர் உண்டா? யார் கண்டது? யாருக்கு உண்மையில் தெரியும்? உலகை உருவாக்கியது எது? யாருக்குத் தெரியும்? அது தானாகவே உருவாகியிருக்கலாம். உருவாகாமலும் இருக்கலாம். சொர்க்கத்திலிருந்து கீழே பார்ப்பவனுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் வாதங்களும் கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளிலிருந்து இந்த மண்ணில் தொடர்ந்து தர்க்கரீதியாகவும் எதிர்மறை வாதமாகவும் கேட்கப்பட்டு வருகின்றன. அதன் கூடவே மிக ஆச்சாரமான மதச் சடங்குகளும் மத நம்பிக்கைகளும் தெய்வ வழிபாடும் பக்தியும் நடைபோடுகின்றன.
கலாச்சார ரீதியாக இங்கு எல்லா கருத்துக்களுக்கும் இடம் இருந்திருக்கிறது. இந்து மதம் என்று கட்டம் போட்ட ஸ்தாபனமே இருக்க வில்லை. புத்த மதமும் சமணமும் எதையும் ஏற்காதவர்களும் நாத்திகர்களும் ஆத்திகர்களும் விகல்பமில்லாமல் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு புத்தமதம் முக்கிய அங்கம் வகித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்போது வந்த சீன யாத்ரிகர்கள் தாங்கள் கண்டதை புத்த ராஜ்ஜியம் என்று வர்ணிக்கிறார்கள். இந்து மதம், இந்து கலாச்சாரம் என்று ஒரே கருத்துரு கொண்டு இந்தியா பண்டைக் காலத்தில் இருக்கவில்லை. அதனாலேயே இந்தியா என்பது ஒரு ஐதீகம். இன்றும் ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் வீற்றிருக்கும். நாத்திகம் பேசும் திராவிட முன்னேற்றக் கழக விழா மேடையில் குன்றக்குடி அடிகளார் அமர்வார். யாரும் அதை முரணாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் ஒரு தூணான பத்திரிகைத் துறையின் தொழில் மட்டுமல்ல, கடமை, தர்மம். நமது ஐதீகங்களைக் குடைவது, பொய்பிம்பங்களை உடைத்தெறிவது. சிறுமை கண்டு பொங்குவது ஆகியவை நசிகேதனும் பாஞ்சாலியும் நமக்குத் தெரிவிக்கும் கலாச்சார அடையாளங்கள், அந்த அடையாளங்களை நான் தொடர்கிறேன். தினம் தினம் என்னனப் பிரமிக்கவைப்பது இது.
பன்முகம் கொண்ட நாம் ஒன்றாக இருப்பதே ஒரு ஐதீகம்.
- வாஸந்தி
Release date
Ebook: 3 January 2020
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to share stories with family and friends.
2-3 accounts
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
2 accounts
S$14.90 /monthEnglish
Singapore