Short stories
வாழ்க்கையில் பல அனுபவங்களின் நினைவுகள் நீங்காத தடங்களாய் மனதில் நிலைத்துவிடுகின்றன. அவற்றில் பசுமையான நினைவுகளும் உண்டு. அப்போது என் கணவர் திரு. ரமணன் இராஜஸ்தானில் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள பார்மீரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார்.
தார் பாலைவனத்தின் ஒரு பகுதி அது. முழுவதும் மணல் பிரதேசம். தகிக்கும் வெய்யில். தாங்க முடியாத குளிர். தண்ணீர் கஷ்டம். எங்கோ தொலைதூரத்திலிருந்த கேணியிலிருந்து ஒட்டகத்தின் மீது தோல் பைகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஒட்டகம் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டால் திண்டாட்டம்தான். காவல் துறையினருக்கான குடியிருப்பிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு மண்பானையில் குடிநீரைத் தினமும் வேலையாள் கொண்டுவருவான். சமையல், சாப்பாடு, விருந்தோம்பல் எல்லாமே அதற்குள் அடங்கவேண்டும், பாம்பும், தேள்களும், எலிகளும் சகவாசிகளாய் எங்களைச் சுற்றிவரும்.
இரவு நேரங்களில் அமைதி படர்ந்து கிடக்கையில் காற்றின் ஓசைகூடப் பயங்கரமாய் ஒலித்து கிலியூட்டும். நாகரீகத்தோடு எங்களை இணைத்த ஒரே போக்குவரத்து தினமும் ஒரு முறை ஜோத்பூருக்குச் சென்ற ரயில்தான்!
அன்றாட வாழ்க்கையில் எழும் கனமான பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு அணுகிப் பார்ப்போமானால் அவற்றின் பரிமாணம் குறைந்து, லேசாகி, சமாளிப்பது எளிதாகிவிடும் என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
- லக்ஷ்மிரமணன்.
Release date
Ebook: 5 February 2020
Short stories
வாழ்க்கையில் பல அனுபவங்களின் நினைவுகள் நீங்காத தடங்களாய் மனதில் நிலைத்துவிடுகின்றன. அவற்றில் பசுமையான நினைவுகளும் உண்டு. அப்போது என் கணவர் திரு. ரமணன் இராஜஸ்தானில் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள பார்மீரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார்.
தார் பாலைவனத்தின் ஒரு பகுதி அது. முழுவதும் மணல் பிரதேசம். தகிக்கும் வெய்யில். தாங்க முடியாத குளிர். தண்ணீர் கஷ்டம். எங்கோ தொலைதூரத்திலிருந்த கேணியிலிருந்து ஒட்டகத்தின் மீது தோல் பைகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஒட்டகம் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டால் திண்டாட்டம்தான். காவல் துறையினருக்கான குடியிருப்பிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு மண்பானையில் குடிநீரைத் தினமும் வேலையாள் கொண்டுவருவான். சமையல், சாப்பாடு, விருந்தோம்பல் எல்லாமே அதற்குள் அடங்கவேண்டும், பாம்பும், தேள்களும், எலிகளும் சகவாசிகளாய் எங்களைச் சுற்றிவரும்.
இரவு நேரங்களில் அமைதி படர்ந்து கிடக்கையில் காற்றின் ஓசைகூடப் பயங்கரமாய் ஒலித்து கிலியூட்டும். நாகரீகத்தோடு எங்களை இணைத்த ஒரே போக்குவரத்து தினமும் ஒரு முறை ஜோத்பூருக்குச் சென்ற ரயில்தான்!
அன்றாட வாழ்க்கையில் எழும் கனமான பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு அணுகிப் பார்ப்போமானால் அவற்றின் பரிமாணம் குறைந்து, லேசாகி, சமாளிப்பது எளிதாகிவிடும் என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
- லக்ஷ்மிரமணன்.
Release date
Ebook: 5 February 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore