Lyric & Poetry
நான் பிரபலமான கவிஞனில்லை. எனக்குப் பெரிய வெளிச்சங்களும் இல்லை. என்றாலும், எரிந்து கொண்டிருக்கிற என் தீபங்களில் எப்போதும் ஒளி உண்டு. அணைந்து விடாத ஆயுளும் அதற்குண்டு.
பெரிது சிறிது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வியத்தலும், இகழ்தலும் இலமே என்கிற இயல்பினன் நான். செருப்பைக் குளிர்க்காட்சி அறையில் வைப்பதோ, சாப்பிடும் உணவைத் தெருவோரம் விற்பதோ இரண்டின் உயர்வு தாழ்வை மாற்றிவிட முடியாது. ஆனால் அப்படி அவை ஆவது சமுதாய சிறுமை பெருமைகளின் அவசியம் மற்றும் அவசரம் சார்ந்தது. என் பார்வையில் அதனதன் இடம் அதற்கு என்பதில் மாற்றமில்லை.
பரபரப்பில்லாமலும், படபடப்பில்லாமலும் இயங்கிக் கொண்டிருக்கிற நான் பார்த்தவற்றையும், என்னைப் பற்றியவற்றையும் பற்றி எழுதிய பதிவுகளே என் கவிதைகள். பழகிய வார்த்தைகள், பலருக்கும் ஏற்படுகிற அனுபவங்கள், புதிய பார்வைகள் என்பதாய் இதன் தகுதியைத் தரம் பிரித்துக் கொள்ளலாம். எதுவானாலும் இதில் அறிந்ததும், அனுபவித்ததுமான அனுபவங்களே அதிகமிருக்கும்.
'பார்த்தது கோடி பட்டது கோடி சேர்த்தது என்ன சிறந்த அனுபவம்' என்பார் கவியரசர் கண்ணதாசன். சிறந்த அனுபவங்கள் பலருக்கு மறந்த அனுபவங்களாகிவிடும். நினைவிலிருந்ததென்றால் சிலர் அவற்றை உரைப்பார்கள். சிலர் உரைநடையாக்குவார்கள். உணர்ந்து, உணர்த்தினால் அவை கவிதையாகிவிடும். நான் உணர்ந்தவற்றை உரைத்திருக்கிறேன்.
திரு. பாரதிசுராஜ் அவர்கள் என்னுடைய இச்சிறுகவிதைகளின் சிறந்த ரசிகர். எங்காவது இவற்றைப் படித்து விட்டால் பாராட்டத் தவற மாட்டார். அவரை வணங்கி மகிழ்கிறேன். தேர்ந்த சில கவிதைகளின் இத்தொகுப்புக்குத் தகுதியுரையாக அணிந்துரை வழங்கியிருக்கிறார் அன்பு நண்பர் கவிஞர் கல்யாண்ஜி. அவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
அன்புடன்
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
Release date
Ebook: May 18, 2020
Lyric & Poetry
நான் பிரபலமான கவிஞனில்லை. எனக்குப் பெரிய வெளிச்சங்களும் இல்லை. என்றாலும், எரிந்து கொண்டிருக்கிற என் தீபங்களில் எப்போதும் ஒளி உண்டு. அணைந்து விடாத ஆயுளும் அதற்குண்டு.
பெரிது சிறிது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வியத்தலும், இகழ்தலும் இலமே என்கிற இயல்பினன் நான். செருப்பைக் குளிர்க்காட்சி அறையில் வைப்பதோ, சாப்பிடும் உணவைத் தெருவோரம் விற்பதோ இரண்டின் உயர்வு தாழ்வை மாற்றிவிட முடியாது. ஆனால் அப்படி அவை ஆவது சமுதாய சிறுமை பெருமைகளின் அவசியம் மற்றும் அவசரம் சார்ந்தது. என் பார்வையில் அதனதன் இடம் அதற்கு என்பதில் மாற்றமில்லை.
பரபரப்பில்லாமலும், படபடப்பில்லாமலும் இயங்கிக் கொண்டிருக்கிற நான் பார்த்தவற்றையும், என்னைப் பற்றியவற்றையும் பற்றி எழுதிய பதிவுகளே என் கவிதைகள். பழகிய வார்த்தைகள், பலருக்கும் ஏற்படுகிற அனுபவங்கள், புதிய பார்வைகள் என்பதாய் இதன் தகுதியைத் தரம் பிரித்துக் கொள்ளலாம். எதுவானாலும் இதில் அறிந்ததும், அனுபவித்ததுமான அனுபவங்களே அதிகமிருக்கும்.
'பார்த்தது கோடி பட்டது கோடி சேர்த்தது என்ன சிறந்த அனுபவம்' என்பார் கவியரசர் கண்ணதாசன். சிறந்த அனுபவங்கள் பலருக்கு மறந்த அனுபவங்களாகிவிடும். நினைவிலிருந்ததென்றால் சிலர் அவற்றை உரைப்பார்கள். சிலர் உரைநடையாக்குவார்கள். உணர்ந்து, உணர்த்தினால் அவை கவிதையாகிவிடும். நான் உணர்ந்தவற்றை உரைத்திருக்கிறேன்.
திரு. பாரதிசுராஜ் அவர்கள் என்னுடைய இச்சிறுகவிதைகளின் சிறந்த ரசிகர். எங்காவது இவற்றைப் படித்து விட்டால் பாராட்டத் தவற மாட்டார். அவரை வணங்கி மகிழ்கிறேன். தேர்ந்த சில கவிதைகளின் இத்தொகுப்புக்குத் தகுதியுரையாக அணிந்துரை வழங்கியிருக்கிறார் அன்பு நண்பர் கவிஞர் கல்யாண்ஜி. அவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
அன்புடன்
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
Release date
Ebook: May 18, 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
International