ஹிரோஷிமாவின் துயரம் எனபது நம் நாகரீகத்தின் துயரம்.அதன் நினைவுகள் இப்போதும் மிரளச் செய்கின்றன. துரத்துகின்றன.உலகின் பெரும் வல்லரசுகள் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள இந்தத் தருணத்தில் அதை நினைவு கூர்வது முக்கியத்துவம் பெறுகிறது. அது, அந்தச் சம்பவம் போன்று மீண்டும் நடைபெறுவதைத் தவிர்க்கும். பயங்கரவாதத்தாலும் வன்முறையாலும் பீடிக்கப்பட்டுள்ள சமகாலச் சமூகத்தில் சகிப்புத்தன்மையற்ற ஒரு சிறு பொறி, பேரழிவிற்கு வித்திட்டுவிடக் கூடும். என்பதைக் குறித்த அச்சத்தை இங்குள்ள ஐந்து கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கவிதைகளை எனது நண்பர் பேராசிரியர் ஹிதேகி இஷிதா மொழிபெயர்த்தார். அந்த ஜப்பானிய மொழி பெயர்ப்பும், அத்துடன் நான் ஹிந்தியில் எழுதிய மூலக் கவிதைகளும் கொண்ட நூல் 2017ல் வெளியாயிற்று.ஜப்பானில் ஹிரோஷிமாவில் அமைந்துள்ள ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 2017ல் அந்த நூல் வெளியானது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள என் நண்பர் சுபாஷ் ஜெய்ரத் இந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரிய செயலை ஏற்றுக் கொண்டார். ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்க தமிழின் முன்னணி எழுத்தாளர் முன் வந்திருப்பது என் பாக்கியம்தான். அவருக்கு என் நன்றி உரியது..
இந்த நூல் எப்போதும் மறந்துவிடக் கூடாத ஹிரோஷிமாவின் துயரத்தையும் அது போல் இன்னொரு துயரம் நடந்து விடக் கூடாதென்பதையும் நினைவூட்டும் என்று நம்புகிறேன்.
- சுரேஷ் ரிதுபர்ணா
تاريخ الإصدار
كتاب : 3 أغسطس 2020
ஹிரோஷிமாவின் துயரம் எனபது நம் நாகரீகத்தின் துயரம்.அதன் நினைவுகள் இப்போதும் மிரளச் செய்கின்றன. துரத்துகின்றன.உலகின் பெரும் வல்லரசுகள் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள இந்தத் தருணத்தில் அதை நினைவு கூர்வது முக்கியத்துவம் பெறுகிறது. அது, அந்தச் சம்பவம் போன்று மீண்டும் நடைபெறுவதைத் தவிர்க்கும். பயங்கரவாதத்தாலும் வன்முறையாலும் பீடிக்கப்பட்டுள்ள சமகாலச் சமூகத்தில் சகிப்புத்தன்மையற்ற ஒரு சிறு பொறி, பேரழிவிற்கு வித்திட்டுவிடக் கூடும். என்பதைக் குறித்த அச்சத்தை இங்குள்ள ஐந்து கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கவிதைகளை எனது நண்பர் பேராசிரியர் ஹிதேகி இஷிதா மொழிபெயர்த்தார். அந்த ஜப்பானிய மொழி பெயர்ப்பும், அத்துடன் நான் ஹிந்தியில் எழுதிய மூலக் கவிதைகளும் கொண்ட நூல் 2017ல் வெளியாயிற்று.ஜப்பானில் ஹிரோஷிமாவில் அமைந்துள்ள ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 2017ல் அந்த நூல் வெளியானது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள என் நண்பர் சுபாஷ் ஜெய்ரத் இந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரிய செயலை ஏற்றுக் கொண்டார். ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்க தமிழின் முன்னணி எழுத்தாளர் முன் வந்திருப்பது என் பாக்கியம்தான். அவருக்கு என் நன்றி உரியது..
இந்த நூல் எப்போதும் மறந்துவிடக் கூடாத ஹிரோஷிமாவின் துயரத்தையும் அது போல் இன்னொரு துயரம் நடந்து விடக் கூடாதென்பதையும் நினைவூட்டும் என்று நம்புகிறேன்.
- சுரேஷ் ரிதுபர்ணா
تاريخ الإصدار
كتاب : 3 أغسطس 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة