كتب دينية
‘வேலுண்டு வினை தீர்க்க, மயிலுண்டு எனைக் காக்க...’ என்ற பாடல், முருகனுடைய நேரடி பார்வைகூட வேண்டாம்; அவனுடைய வேலும், மயிலுமே நம் குறைகளைத் தீர்க்கும்; வேதனைகளைக் களையும் என்று உறுதியாகச் சொல்கிறது. நல்லோர் மேலும் மேன்மை பெறவும், தீயோர் மனந்திருந்தி நல்வாழ்வு பெறவும் முருகன் வழி காட்டுகிறான். தன்னை எதிர்ப்போரையும் தன்னோடு அரவணைத்துச் சென்று ஆதரிக்கும் அருங்குணத்தோன் அவன். அதனால்தான் அசுரன் சூரபத்மனை இரண்டாகப் பிளந்து அவன் உயிரை அழித்தாலும், அந்த இரண்டு பகுதிகளும் 'பணிப்பகை மயிலும் சேவற்பதாகையு'மாக மாறி அவனுடனேயே காட்சி தருகின்றன. ஆறுமுகப் பெருமானுக்கு முன்போய் நின்றால் தீயவர்களும் நல்லவர்களாகி விடுவார்கள் என்றுதானே இதற்குப் பொருள்? கச்சியப்பரும் கந்த புராணத்தில் அதைத்தான் பாடி வைத்திருக்கிறார்
"தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் நின்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அருசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனு மன்றோ வரம்பிலா அருள்
பெற்றுய்ந்தான்"
முருகப் பெருமான் முன்னே தீயவரும் தூயவராகி விடுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்று கேட்கிறார் கச்சியப்பர்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அழகன் ஆறுமுகன் ஆறு படைவீடுகளில் கொலுவிருந்து அருட்செல்வத்தை வாரி வாரி வழங்குகிறார். அந்தப் படைவீடுகளை ஒவ்வொன்றாக இந்நூலில் நாம் தரிசிக்கப் போகிறோம்.
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020
كتب دينية
‘வேலுண்டு வினை தீர்க்க, மயிலுண்டு எனைக் காக்க...’ என்ற பாடல், முருகனுடைய நேரடி பார்வைகூட வேண்டாம்; அவனுடைய வேலும், மயிலுமே நம் குறைகளைத் தீர்க்கும்; வேதனைகளைக் களையும் என்று உறுதியாகச் சொல்கிறது. நல்லோர் மேலும் மேன்மை பெறவும், தீயோர் மனந்திருந்தி நல்வாழ்வு பெறவும் முருகன் வழி காட்டுகிறான். தன்னை எதிர்ப்போரையும் தன்னோடு அரவணைத்துச் சென்று ஆதரிக்கும் அருங்குணத்தோன் அவன். அதனால்தான் அசுரன் சூரபத்மனை இரண்டாகப் பிளந்து அவன் உயிரை அழித்தாலும், அந்த இரண்டு பகுதிகளும் 'பணிப்பகை மயிலும் சேவற்பதாகையு'மாக மாறி அவனுடனேயே காட்சி தருகின்றன. ஆறுமுகப் பெருமானுக்கு முன்போய் நின்றால் தீயவர்களும் நல்லவர்களாகி விடுவார்கள் என்றுதானே இதற்குப் பொருள்? கச்சியப்பரும் கந்த புராணத்தில் அதைத்தான் பாடி வைத்திருக்கிறார்
"தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் நின்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அருசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனு மன்றோ வரம்பிலா அருள்
பெற்றுய்ந்தான்"
முருகப் பெருமான் முன்னே தீயவரும் தூயவராகி விடுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்று கேட்கிறார் கச்சியப்பர்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அழகன் ஆறுமுகன் ஆறு படைவீடுகளில் கொலுவிருந்து அருட்செல்வத்தை வாரி வாரி வழங்குகிறார். அந்தப் படைவீடுகளை ஒவ்வொன்றாக இந்நூலில் நாம் தரிசிக்கப் போகிறோம்.
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة