الرواية
பத்மினி பட்டாபிராமன் எழுதி வெளியிட்டிருக்கும் இந்த சிறுகதைகள் தொகுதியில், மொத்தம் 28 சிறுகதைகள் உள்ளன
கலைமகளில் வெளியாகி, பெரும் பாராட்டுப் பெற்றது முப்பரிமாணம் சிறுகதை,மனைவியை ஏமாற்ற நினைக்கும் கணவர், அவரை சந்தேகிக்கும் மனைவி, நடுவில் புகும் திருடன், யாரை யார் ஏமாற்றினார்கள்? அதுவே இக்கதை.
ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை “பிற்பகல்” அதே பத்திரிகையில் வெளியான மற்ற கதைகள், “புலி தின்ற மிச்சம்”, “எதிர்காற்று.”
குமுதம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது “மறுமுகம்” சிறுகதை.
விக்கிரமன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய தமிழரசி பத்திரிகையில் அமரர் எம்.ஜி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு வென்ற கதை “களைகள்”
ஒரு கிராமத்து ஏழை அர்ச்சகர் வீட்டில் டீவி சீரியலுக்கான ஷூட்டிங் நடக்கிறது. அப்போது என்னா ஆகிறது? சுவையான “அன்னதானம்” சற்றே நீண்ட கதை.
“சின்னப் பெண்ணும் செல்ஃபோனும்”, “நீலச் சட்டைக்காரன்”, டிசைனர், சின்ன மனசு கதைகள் முறையே கல்கி, லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர்களில் வெளியானவை.
சிரிக்கவும் சிந்திக்கவும் கவர் கவராய் கனவுகள் கதை.
இன்னும், சாவி, அமுதசுரபி, மங்கை, ராஜம்,வளையோசை பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.
تاريخ النشر
كتاب إلكتروني: 17 مايو 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت