الشعر
கவிதை என்றால் சிறுகதை போல் வாசகர்களுக்கு ஒரு செய்தியை எளிமையாக எடுத்துச் சொல்வதாகயிருக்கவேண்டும். அதுவும் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை யதார்த்தரீதியாக எடுத்துக்காட்டுவதினால் சிலரின் முதத்தில் சுழிப்புகளும் சலிப்புகளும் சிரிப்புகளும் வரலாம். ஆனால் முக்கியமாக வரவேண்டியது சிந்தனையும், அலசலும்.
“அருவி” என்ற முதற் கவிதையின் பெயருடன் வெளிவர காரணம் உண்டு. சிந்தனை, அருவி போல் இருக்கவேண்டும் தடையின்றி பொழிய வேண்டும். இவ் முதல் கவிதையில் ஒரு தத்துவம் எளிமையாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அருவி எவ்வாறு தன்னுள் மறைந்துள்ள சக்தியை மனிதயினத்திற்கு மின்சாரமாகமாறி பயன் கொடுக்கிறதோ அதேபோன்று வாழ்க்கையில் எமது இலக்கிய ஆக்கத்திறன் மூலம் மக்கள் சிந்தனைகளைத் தூண்டி அறிவு விருத்தி என்ற பயனைக் கொடுக்கவேண்டும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 4 يونيو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت