அன்பான வாசகர்களுக்கு... வணக்கங்கள்!
“நீதானே என் வசந்தம்!” எந்த விருட்சம் தழைக்கவும், ஒரு சிறிய விதைதான் ஆணிவேராய்!
அதுபோல் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஆதாரமான விதையாக இருப்பது, நேசமும், நம்பிக்கையும்தான்! அது வீரியமாக இல்லையென்றால், வாழ்க்கையே வாடிப் போகின்றது.
ஒரு பெண் மலர. அவள் கணவனின் அன்பும், புரிந்து கொள்ளலுமே, உயிர்ப்பை தருகின்ற சூரியக் கதிர்களாய்...! ஆனால் அந்தக் கதிர்களே, அந்த மலரை வார்த்தைகளால் சுட்டெரித்து விட்டால்..!
பலருடைய வாழ்க்கையில், சில தவறான கணிப்புகள் அவர்களுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் வல்லமை படைத்தவையாக அமைந்து விடுகின்றன.
இந்தக் கதையின் நாயகனும் அப்படித்தான்!
தான் செய்யாத தவறுக்காக பாதிக்கப்பட்டு, விடை தெரியா எதிர்காலம் கண்முன் நிற்க உடைந்து போனாலும், பிறகு தன் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்நோக்கி, வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டு, சீராக்கிக் கொண்ட நாயகியின் வாழ்விலும் வசந்தம் வந்ததா என்பதை, இந்த நாவலில் உங்களின் பார்வைக்கு அளித்திருக்கிறேன்.
மகரந்தங்களைத் தன் மடியில் நறுமணத்துடன் சுமக்கின்ற மலர்களைப் போல், வாசகர்களாகிய உங்களின் அன்பையும், ஆதரவையும், விமர்சனங்களையும் நட்புடன் சுமக்கிறது என் மனது!
சிநேக வணக்கங்களுடன்,
உமா பாலகுமார்
تاريخ النشر
كتاب إلكتروني: 23 ديسمبر 2019
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت