الرواية
பணமா, பாசமா - காதல் கதைகளோடு வித்தியாசமான கதைகளை எழுதுவதற்கு அனுமதித்த என் பேனா, இம்முறை இந்த கதையை எழுதப் போகிறேன் என்று சொன்னதற்கு தயங்கியது. இக்கதையின் வீரியம் மன பாரத்தை சுமக்கும் எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும், அதோடு நடுத்தர வயதை கடந்து கொண்டிருக்கும் பலருக்கும் எச்சரிக்கை உணர்வை உணர்த்தும் என்று சொல்லி என் பேனாவிடம் அனுமதி பெற்றேன். இதயமுள்ள எவரையும் "நாளை நம் நிலை என்ன?" என்று இக்கதை யோசிக்க வைத்தால், அதுவே என் படைப்பின் நோக்கம் நிறைவேறிவிடும்.இக்கதையின் முடிவு உங்களை ஒரு நிமிடமாவது, கண்கலங்க வைத்தால் அது என் பேனாவிற்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியாக இருக்கும். உங்கள் விமர்சனங்களை எதிர் நோக்கி.
- காஞ்சி. பாலச்சந்திரன்.
تاريخ النشر
كتاب إلكتروني: 11 ديسمبر 2019
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت