Fantasy & SciFi
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். “தவறிப்போன தாயனை 2050” வெறும் புதினம் அல்ல. சிறுவயதிலிருந்து எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு, தற்போது நானே விடை தேடிக் கண்டறிந்து, காலத்தால் மறைந்து போன உண்மைகளை சேகரித்து, அறிவியல் அடிப்படைகளோடு பின்னிய ஒரு கதையாகும். கடவுள் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்? எப்படி நீண்ட நாள் வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான விடை தேடும் போது உருவான படைப்புதான் இந்த அறிவியல் புனைவு. அந்தத் தேடலில், நான் எந்தப் பக்கம் சென்றாலும் என் கண்ணில் பட்டவை சித்தர்களைப் பற்றிய பேருண்மைகள். சித்தர்கள் இல்லாத ஒரு கடவுளின் வரலாறு இருக்கவே முடியாது. இந்நிகழ்வின் ஆய்விற்காக சித்தர்கள் எழுதிய பாடல்களைப் படிக்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட அறியாமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சித்தர்களைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவருமே மறந்து போனது என்னைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் பழமையைக் கிளறி எடுக்க வில்லையென்றால், இறுதி வரை நம் மனித இனத்தின் உண்மை வரலாற்றை அறியாமலேயே அழிந்து விடுவோம். அதுமட்டுமின்றி, இதன் கதை மாந்தர்கள் வருங்காலத்திற்கு உங்களை அழைத்துச் சென்று அங்கு நிகழவிருக்கும் நவீன தொழில் நுட்பங்களை பற்றிய சிந்தனையையும் தூண்டுவார்கள் என்று நம்புகிறேன். என் கற்பனையில் விரிந்த எதிர்கால உலகை, தொழில்நுட்ப வளர்ச்சியோடு காட்சிப்படுத்தியுள்ளேன். முப்பது வருடங்கள் கழித்து, இந்நாவலை வாசித்தவர்களில் ஒருவரேனும், என்னை ஒரு முறை நினைவு கூர்ந்தால், அதுவே எனது பாக்கியம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதியுள்ளேன். வாசித்து மகிழுங்கள்!
Release date
Ebook: 22 January 2022
Fantasy & SciFi
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். “தவறிப்போன தாயனை 2050” வெறும் புதினம் அல்ல. சிறுவயதிலிருந்து எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு, தற்போது நானே விடை தேடிக் கண்டறிந்து, காலத்தால் மறைந்து போன உண்மைகளை சேகரித்து, அறிவியல் அடிப்படைகளோடு பின்னிய ஒரு கதையாகும். கடவுள் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்? எப்படி நீண்ட நாள் வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான விடை தேடும் போது உருவான படைப்புதான் இந்த அறிவியல் புனைவு. அந்தத் தேடலில், நான் எந்தப் பக்கம் சென்றாலும் என் கண்ணில் பட்டவை சித்தர்களைப் பற்றிய பேருண்மைகள். சித்தர்கள் இல்லாத ஒரு கடவுளின் வரலாறு இருக்கவே முடியாது. இந்நிகழ்வின் ஆய்விற்காக சித்தர்கள் எழுதிய பாடல்களைப் படிக்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட அறியாமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சித்தர்களைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவருமே மறந்து போனது என்னைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் பழமையைக் கிளறி எடுக்க வில்லையென்றால், இறுதி வரை நம் மனித இனத்தின் உண்மை வரலாற்றை அறியாமலேயே அழிந்து விடுவோம். அதுமட்டுமின்றி, இதன் கதை மாந்தர்கள் வருங்காலத்திற்கு உங்களை அழைத்துச் சென்று அங்கு நிகழவிருக்கும் நவீன தொழில் நுட்பங்களை பற்றிய சிந்தனையையும் தூண்டுவார்கள் என்று நம்புகிறேன். என் கற்பனையில் விரிந்த எதிர்கால உலகை, தொழில்நுட்ப வளர்ச்சியோடு காட்சிப்படுத்தியுள்ளேன். முப்பது வருடங்கள் கழித்து, இந்நாவலை வாசித்தவர்களில் ஒருவரேனும், என்னை ஒரு முறை நினைவு கூர்ந்தால், அதுவே எனது பாக்கியம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதியுள்ளேன். வாசித்து மகிழுங்கள்!
Release date
Ebook: 22 January 2022
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore