Classics
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது கைந்நிலை ஆகிய ஆறு நூல்களும் அகப் பொருள் குறித்த நூல்கள் அவற்றில் ஒன்றாக வருவது திணைமாலை நூற்றைம்பது.
அகத்திணை நூல்களில் நூற்றைம்பது பாடல்களுக்கு மேல் உள்ள இந்த நூல் மற்ற நூல்களை விட அளவிற் பெரியதாக விளங்குகிறது.
ஐந்து திணைகளிலும் உள்ள ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து அதனை மாலையைப் போல தந்ததால் இந்த நூலுக்கு திணை மாலை என்று பெயர் வந்தது.
மேலும் இந்த நூலில் 150 பாடல்கள் உள்ளதால் எண்ணிக்கையை வைத்து திணை மாலை நூற்றைம்பது என்று பெயர் பெற்றது. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் இந்த நூலில் ஐந்திணைகளும் முறைப்படுத்திப் பாடப்பட்டுள்ளது.
ஒரு திணைக்கு 30 பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் 150 பாடல்கள் இருக்க வேண்டும் என்பது முறை. ஆனால், குறிஞ்சி, நெய்தல், முல்லை போன்ற திணைகளில் 32 பாடல்கள் உள்ளன.
பாலை, மருதம் திணைகளில் 30 பாடல்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாயிரத்தில் ஒரு பாடல் வருகின்றது. எனவே, இந்த நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டுள்ளது.
இந்த நூலில் புணர்ச்சியின் போக்கை கூறக்கூடிய குறிஞ்சியை முதலில் கூறி அதனையடுத்து அன்பின் முதிர்வாகிய நெய்தலையும், பின்னர் பிரிவை எடுத்துக்காட்டக் கூடிய பாலையையும் பிரிவு துன்பத்தை ஆற்றியிருக்கும் முல்லையையும் பின்னர் ஊடலைக் கூறும் மருதத்தையும் இங்கு பாயிரமாக பாடப்பட்டுள்ளது. ‘‘முனிந்தார் முனிமொழியச் செய்யுட்கண் முத்துக் கணிந்தார் களவியற் கொள்கை’’ என்று கூறப்பட்டுள்ளது. அகப்பொருளாகிய களவியற் கொள்கையை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியான இனிய முத்துக்களைப் போன்ற வெண்பாக்களால் கணிமேதாவியார் இந்நூலை இயற்றினார் என்பது இதன் கருத்தாகும்.
இந்த நூலின் ஆசிரியர் கணிமேதாவியர் என்பவர் ஆவார். இவரை கணிந்தார் என்று கூறுவதுண்டு.
இவரின் பெயரின் மூலம் கணிமேதை என்று அறிந்து கொள்ள முடிகிறது. இவரைச் சிலர் ஜோதிட கலை வல்லவர் என்றும் சொல்வார்கள்.
இந்த புலவர் ‘மல்லிவர் தோள் மாக்காயனார்’ என்று சொல்வார்கள். திணைமாலை 150 என்னும் நூலை இயற்றிய ஆசிரியரும் இவர்தான்.
சிறுபஞ்ச மூலம் என்ற நூலை இயற்றிய காரியாசானும் இவரும் சம காலத்ததவர்கள்.இவர்கள் இருவருமே ‘மல்லிவர் தோள் மாக்காயனார்’ என்னும் ஆசிரியரின் மாணவர்கள்.
ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். கடைச் சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூலாக இது கருதப்படுகிறது.
undefined: 17 May 2021
Classics
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது கைந்நிலை ஆகிய ஆறு நூல்களும் அகப் பொருள் குறித்த நூல்கள் அவற்றில் ஒன்றாக வருவது திணைமாலை நூற்றைம்பது.
அகத்திணை நூல்களில் நூற்றைம்பது பாடல்களுக்கு மேல் உள்ள இந்த நூல் மற்ற நூல்களை விட அளவிற் பெரியதாக விளங்குகிறது.
ஐந்து திணைகளிலும் உள்ள ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து அதனை மாலையைப் போல தந்ததால் இந்த நூலுக்கு திணை மாலை என்று பெயர் வந்தது.
மேலும் இந்த நூலில் 150 பாடல்கள் உள்ளதால் எண்ணிக்கையை வைத்து திணை மாலை நூற்றைம்பது என்று பெயர் பெற்றது. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் இந்த நூலில் ஐந்திணைகளும் முறைப்படுத்திப் பாடப்பட்டுள்ளது.
ஒரு திணைக்கு 30 பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் 150 பாடல்கள் இருக்க வேண்டும் என்பது முறை. ஆனால், குறிஞ்சி, நெய்தல், முல்லை போன்ற திணைகளில் 32 பாடல்கள் உள்ளன.
பாலை, மருதம் திணைகளில் 30 பாடல்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாயிரத்தில் ஒரு பாடல் வருகின்றது. எனவே, இந்த நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டுள்ளது.
இந்த நூலில் புணர்ச்சியின் போக்கை கூறக்கூடிய குறிஞ்சியை முதலில் கூறி அதனையடுத்து அன்பின் முதிர்வாகிய நெய்தலையும், பின்னர் பிரிவை எடுத்துக்காட்டக் கூடிய பாலையையும் பிரிவு துன்பத்தை ஆற்றியிருக்கும் முல்லையையும் பின்னர் ஊடலைக் கூறும் மருதத்தையும் இங்கு பாயிரமாக பாடப்பட்டுள்ளது. ‘‘முனிந்தார் முனிமொழியச் செய்யுட்கண் முத்துக் கணிந்தார் களவியற் கொள்கை’’ என்று கூறப்பட்டுள்ளது. அகப்பொருளாகிய களவியற் கொள்கையை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியான இனிய முத்துக்களைப் போன்ற வெண்பாக்களால் கணிமேதாவியார் இந்நூலை இயற்றினார் என்பது இதன் கருத்தாகும்.
இந்த நூலின் ஆசிரியர் கணிமேதாவியர் என்பவர் ஆவார். இவரை கணிந்தார் என்று கூறுவதுண்டு.
இவரின் பெயரின் மூலம் கணிமேதை என்று அறிந்து கொள்ள முடிகிறது. இவரைச் சிலர் ஜோதிட கலை வல்லவர் என்றும் சொல்வார்கள்.
இந்த புலவர் ‘மல்லிவர் தோள் மாக்காயனார்’ என்று சொல்வார்கள். திணைமாலை 150 என்னும் நூலை இயற்றிய ஆசிரியரும் இவர்தான்.
சிறுபஞ்ச மூலம் என்ற நூலை இயற்றிய காரியாசானும் இவரும் சம காலத்ததவர்கள்.இவர்கள் இருவருமே ‘மல்லிவர் தோள் மாக்காயனார்’ என்னும் ஆசிரியரின் மாணவர்கள்.
ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். கடைச் சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூலாக இது கருதப்படுகிறது.
undefined: 17 May 2021
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore