Step into an infinite world of stories
Fiction
21ம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய சவால் கொரானா காலமாகும். உலகமே முடங்கிக் கிடந்தது. வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சினார்கள். முடங்கி விட்டார்கள். நானும் அவ்வாறுதான் வீட்டுக்குள் முடங்கிவிட்டேன். ஆனால் எதையாவது செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. என்னுடைய பணி எழுதுவது. குறுநாவல்கள் எழுத ஆரம்பித்தேன். ஆறு குறுநாவல்கள் எழுதினேன். இந்தத் தொகுதியில் மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இந்த நாவல்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.
ஆதிகாலம் தொட்டு உலகத்தில் காதலுக்கும், பணத்துக்குமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஈமகேஷ் நல்லவனா கெட்டவனா? எதற்காக அவன் நண்பர்களான சரண்யாவும், தீபக்கும் அவனைக் கைவிட்டார்கள்? சவீதா என்ன முடிவு எடுத்தாள்? இப்படி கதை தன் போக்கில் செல்கிறது. நாமும் அப்படி போகலாம். இரண்டாம் குறுநாவல் “வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ”--அறிமுகம் படிக்கும் காலத்திலிருந்தே நவீனும், நளினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நளினியின் அம்மா நிர்மலா ஒரு பிரச்னையாக உருவெடுக்கிறாள். அவள் அவர்களை ஆதரிக்கிறாளா எதிர்க்கிறாளா என்பது இரு வீட்டாருக்கும் புரிபடவில்லை. அவர்கள் காதல் நிறைவேறியதா, நிர்மலா மனம் மாறினாளா? நாவலில் தெரிய வரும். மூன்றாம் குறுநாவல் “இனிமை நினைவுகள் தொடரட்டுமே” அறிமுகம் நளினியை ஒரு கல்யாண ரிசப்ஷனில் முதன் முதல் சந்திக்கிறான்.சுந்தர். மேடையில் அவள் பாடிய பாடலைப் பாராட்டுகிறான். நளினிக்கும் அவனைப் பிடிக்கும் போலிருந்தது. நடுவில் தேவகி என்ற பெண் போட்டியாக வருகிறாள். யார் இதில் வென்றார்கள். நாவலில் தெரிந்துவிடும்
Release date
Ebook: March 19, 2025
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International