Step into an infinite world of stories
Fiction
நாம் பேசுவதாயினும் சரி... பிறர் பேசுவதாயினும் சரி... பேசுவதை யாரும் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது. பேசக் கிடைக்கிற வாய்ப்பு ஒருவரோடொருவர் ஒரு சிலரோடு ஒருவர்... என்பதாக வளர்ந்து பலரது முன்னால் எனும் போது பேச்சுக்கலை உரையாடலில் தொடங்கி சொற்பொழிவு, சிறப்புரை, பேருரை என்றெல்லாம் நிறைவு பெறும்.
நல்ல பேச்சென்பது நன்றாகப் பேசுவதோடு நல்லதைப் பேசுவதாகவும் நிறைவாக நிறையச் செய்திகள் பொதிந்ததுவாக, பயனுடையதாகவும் அமைதல் வேண்டும். அப்படி அமையும்போது பேசுகிறவருக்குப் பாராட்டு என்பதைப் போலவே நூலாகும் நல்ல வாய்ப்பும் அமையும். இப்படி அமைய வேண்டும் என்கிற அக்கறை என்பதை விட அச்சம் நான் பேசமுற்படுமுன் ஏற்படுவதால் என்னைத் தயாரித்துக் கொள்வேன். இந்தத் தயாரிப்புதான் அவற்றைத் தொகுத்து நூலாக்குகிற துணிவைத் தந்துள்ளது. என்னுடைய பொழிவுகளை நூலாக்குதல் தொடர்கிறது. என் கவிதைகளைப் போலவும், சிறுகதைகளைப் போலவும், நாடகங்களைப் போலவும் இவையும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொழிவுகளுக்கு கட்டுரைகள் என்கிற தகுதி பேசுகிறவர்களின் பொறுப்பால் அமையும். அமைந்திருப்பதாக என்னுள் மிகப் பணிவான எண்ணம். “எண்ணிய வண்ணமாய்” என்கிற இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு அரங்குகளில் நான் பேசியவை, ஒன்றிரண்டு மலர்களுக்கு எழுதியவையும் கூட. இதைப் படிக்கும் போது நான் படித்தவை உங்களுக்குப் படிக்கக் கிடைக்கும். நான் உணர்ந்தவை உங்கள் உபயோகத்துக்கு வரும். இந்நூல் உங்களுக்குப் பயன்படும் நம்பிக்கை எனக்குண்டு. என்னைப் பேச அழைத்தவர்களுக்கும் எழுத விழைந்தவர்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.
-ஏர்வாடி. எஸ். இராதாகிருஷ்ணன்
Release date
Ebook: May 18, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International