சென்ற நூற்றாண்டின் மத்தியில் பிரான்ஸ் நாட்டில், குற்றவாளிகளுக்கான தண்டனைகள் மிகக் கொடூரமாக இருந்தன. ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்குத் தீவாந்தர சிட்சை தந்து, அட்லாண்டிக் சமுத்திரத்தின் கோடியில் இருந்த ஃபிரெஞ்சு கயானாவுக்கு அனுப்பி வைத்து சித்திரவதை செய்தார்கள். திருட்டுத்தனமாகப் படகுகள் தயாரித்துத் தப்ப முயன்ற அவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது இன்னல் பலபட்டு இறந்தார்கள்.ஹென்றி ஷாரியர் என்றகைதி மட்டும் பதினாறு முறை அவ்வாறு முயன்று சுதந்தர புருஷனாக ஆனான். பதின்மூன்றாண்டுக் காலம் அவன் செய்த வீரதீரச் செயல்கள், அவனுடைய சுயசரிதையாக வெளிவந்தது. ‘பட்டாம்பூச்சி’ என்ற அந்தக் காவியம் உலக இலக்கியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஹென்றி ஷாரியரைப் போலவே தீவாந்தர சிட்சையிலிருந்து தப்ப முயற்சி செய்த பல கைதிகள், அவனைப் போலவே தங்கள் அனுபவங்களை எழுதினார்கள். ஆனால் அவை புகழ் பெறவில்லை. இருப்பினும் ஃபெலிக்ஸ் மிலானி என்ற கைதி எழுதிய CONVICT என்ற சுயசரிதம். கிட்டத்தட்டப் பட்டாம்பூச்சியின் புகழை எட்டிப் பிடித்தது. அதைச் சற்றுச் சுருக்கமாக மொழிபெயர்த்து எழுதுமாறு அமரர் எஸ்.ஏ.பி. என்னைப் பணித்தார்கள். நாற்பது வாரம் குமுதத்தில் அது வெளிவந்தது.
மிலானியின் அனுபவங்கள் உள்ளத்தைத் தொடும் உருக்கம் கொண்டவை. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத உண்மைக் கதை.
ரா.கி.ரங்கராஜன்
Release date
Ebook: June 2, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
9.99 € /month
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime