Step into an infinite world of stories
Fiction
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, வாசகர்களின் பெருக்கம், இதழ்களின் வளர்ச்சி சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. நூற்றுக்கணக்கான வார, மாத இதழ்களின் பரப்பளவில் பெரும்பகுதி சிறுகதைகளே. இதழ்களின் அசுரப்பசிக்கு ஆயிரக்கணக்கான சிறுகதைகளே தீனி. சிறுகதை வனத்திடையே நந்தவனப் பூக்களும் உண்டு. கதைக்காடுகளிடையே எழில் மிக்க தோப்புகளும் உண்டு. புதுமைப்பித்தன் முதல் அகிலன்வரை கல்கி முதல் ஜெயகாந்தன்வரை, லட்சுமி முதல் சிவசங்கரிவரை சிறுகதைத் தோட்டத்திற்கு வளம் சேர்த்தோர் பலர். நாவல்களும் சிறுகதைகளும் அயல்மொழி இலக்கிய வடிவமாயினும் தமிழ் நிலத்தில் வேர்ஊன்றி விழுது விட்டுப் பூத்துக் குலுங்குகின்றன.
சிறுதையின் வடிவம், உள்ளீடு, உத்திகள், வெளிப்பாட்டு வகைகள், புலப்பாட்டு நெறிகள், நாளும் வளர்ந்தோங்கி வருகின்றன. இதழ்கள் பல; கதைகள் மிகப்பல; படிப்போரும் பலர்; வாழுங்கதைகளோ சிலவே. உயிராற்றல் பெற்ற கதைகள் கதையாசிரியர்களின் ஆளுமையால் சாகா வரம் பெற்று விடுகின்றன. வாடா மலர்களாய் மணம் பரப்புகின்றன.
'பெயர் சொல்லும் பூக்கள்' மனசின் விந்தையான போக்கைக் காட்டுவதுடன், பெண்ணின் மனம் லேசில் புரிந்து கொள்ளமுடியாத பெரும் புதிர் என்பதையும் வலியுறுத்துகிறது.
Release date
Ebook: May 17, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International