Step into an infinite world of stories
Fiction
'
நான்’ இல் ஆரம்பித்து ‘எழுத்தாளன் பாடும் கீதம்' வரைக் காலவீச்சு ஏறக்குறைய நாற்பது வருடங்கள்.
'சொல்லோடு என் உறவு' இந்தக் கட்டுரை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம் நடத்திய இலக்கியப் பட்டறையில் நான் படித்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த தலைப்பு (The word and the creative process) கேட்டவர்கள், அப்பவே, அது கதைப் பாணியில் அமைந்திருப்பதாகச் சொன்னார்கள். தொகுதியிலேயே நீளமான கட்டுரை. பெர்னாட்ஷா கட்டுரையின் நீளத்தை நான் ஒப்புக்கொள்வதோ ஒரு தப்பு, பலவீனம் என்று உறுமுவது என் உட் செவியில் கேட்கிறது. நானும் மன்னிப்புக் கேட்கவில்லை. சொல்லோடு என் அனுபவம், எழுத்தாளர்களுக்கு, ஏன் வாசகர்களுக்கும் தான் பயன் படக்கூடும் என்கிற எண்ணம் தான்.
இப்போது இன்னொன்றும் புலப்பட்டது. புத்தகத்தின் பிற்பகுதியில் 'The spirit of man' என்கிற ப்ரயோகம், சற்றுக் கூடுதலாவே அடிபடுகிறது போல எனக்குத் தோன்றுகிறது. இதை நேர்த் தமிழ்ப்படுத்தும் என் முயற்சியில் ‘ஆத்மாவின் உத்வேகம், தேடல் துடிப்பு’ மொழி பெயர்ப்பு ஈடு கொடுக்கிறதா? ஊஹும். திருப்தியில்லை. ஆத்மா என்பது Spirit ஆவது ‘மனித ஆவேசம்?' இன்னும் சற்று நெருக்கமாகப் பொருந்தலாம்? ஆனால் நம் பண்பாட்டு முறையில் பழக்கமுறையில் பாரம்பர்ய முறையில் ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்கிற சித்தத்தில் அதன் மேலேயே எல்லா சுமைகளையும் ஏற்றிவிடுகிறோம். அந்த முறையில், உத்வேகத்துடன், தேடல் துடிப்புடன், ஆத்மாவின் கர்வத்தையும் சேர்த்துக் கொள்கிறேன். சரி, ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்பதால், என்னுடைய கர்வமாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!
ஆகவே, The spirit of man, இந்தத் தொகுப்பின், ஏன் பூரா என் எழுத்தின் உள் சரடாக, உயிர் நாடியாக, ஜபமணியாகத் திகழ்வது தெரிகிறேன். மனம் எப்படிப் பழக்கப்பட்டிருக்கிறதோ அப்படித் தான் நினைப்பு. நினைப்பின் படித்தான் அதன் எழுத்து.
இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைத் தொகுத்துக் கொடுத்த உதவி சப்தரிஷியை (லா. ரா)ச் சாரும்.
Release date
Ebook: February 5, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International