3.7
روايات رومانسية
தன் பேண்ட் பாக்கெட்டில் ஒலித்த அலைபேசியின் அழைப்பை புறக்கணித்தான் சர்வேஸ்வர். அவன் தன் முறைப்பெண் வெண்பாவுடன் எத்தனை முக்கியமான டிஸ்கஷனில் இருக்கிறான். அவனைப்போய் தொல்லைப் படுத்திக்கொண்டு! மீண்டும் அலைபேசி அழைக்க, கடுப்பானாள் வெண்பா. மாமனின் பேண்ட் பாக்கெட்டில் கைநுழைத்து, அலைபேசியை எடுத்து, மானிட்டர் பார்த்து, “ஹலோ அண்ணா...” என்றவளின் குரலில் வேகம் தெரிந்தது. “நீயெதுக்கு அடென்ட் பண்ணறே? சர்வா கிட்ட ஃபோன் கொடு.” கடுப்பில் பேசினான் அபிமன்யு. “அவன்... அவர்... பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கார். லெக் பீஸ் கடிச்சிட்டு இருக்கான். அவனால இப்ப ஃபோன் பேசமுடியாது.”
“நேர்ல வந்தேன்னா தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன். அவனைப் பேசச் சொல்லு.” என்று அபிமன்யு குரலை உயர்த்த, “என்னவோ முக்கியமா பேசணும் போல!” என்று சிணுங்கிக்கொண்டே சர்வேஸ்வரிடம் அலைபேசியைக் கொடுத்தாள் வெண்பா. “சொல்லு கரடி மச்சான்...” என்ற சர்வாவின் ஆரம்ப விளித்தலே அமர்க்களமாக இருக்க, அந்தப் பக்கம் அபிமன்யு என்ன வாசித்தான் என்று தெரியவில்லை.
“எதுக்கு கோவப்படுறே மச்சான்? உன் ஆளுன்னு சொல்லி வைச்சாக்கா, வீட்டுல இருக்கறவங்க இன்னும் கொஞ்சம் அக்கறையா பார்த்துப்பாங்க. ஃபிரெண்டுன்னு சொல்றதுக்கும், பியான்சின்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல.” சிரித்தான் சர்வா. “யோவ்! எகத்தாளம் புடிச்ச மாப்பிள்ள... நீ ரியாவுக்குப் பாதுகாப்பு கொடுப்பேன்னு பார்த்தால், போன வேகத்துல நாரதர் கலகம் பண்ணி வெச்சிருக்கே! அம்மா திடீர்னு என்மேல கோபமா இருக்காங்க.” என்றான் அபிமன்யு. “நாரதர் கலகம் நன்மையில் முடியும். நம்பு மச்சான். பிரியாணி சாப்பிட விடு. நல்ல பசியோட இருக்கேன்.” என்று அலைபேசியை அணைத்த சர்வா, தன் எதிரே நின்றவளை ஒரு மார்க்கமாகப் பார்க்க, வெண்பா அவனுக்குச் செல்லமாகப் பழிப்புக் காட்டினாள். “அதென்ன... ஒருநேரம் பேசும்போது ‘அவன்’... இன்னொரு நேரம் பேசும்போது ‘அவர்’ன்னு மாறிமாறி வருது.” தன் இருவிரல்களுக்கு இடையே வைத்து, வெண்பாவின் உதடுகளோடு விளையாடினான் சர்வா.
تاريخ الإصدار
كتاب : 19 ديسمبر 2022
3.7
روايات رومانسية
தன் பேண்ட் பாக்கெட்டில் ஒலித்த அலைபேசியின் அழைப்பை புறக்கணித்தான் சர்வேஸ்வர். அவன் தன் முறைப்பெண் வெண்பாவுடன் எத்தனை முக்கியமான டிஸ்கஷனில் இருக்கிறான். அவனைப்போய் தொல்லைப் படுத்திக்கொண்டு! மீண்டும் அலைபேசி அழைக்க, கடுப்பானாள் வெண்பா. மாமனின் பேண்ட் பாக்கெட்டில் கைநுழைத்து, அலைபேசியை எடுத்து, மானிட்டர் பார்த்து, “ஹலோ அண்ணா...” என்றவளின் குரலில் வேகம் தெரிந்தது. “நீயெதுக்கு அடென்ட் பண்ணறே? சர்வா கிட்ட ஃபோன் கொடு.” கடுப்பில் பேசினான் அபிமன்யு. “அவன்... அவர்... பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கார். லெக் பீஸ் கடிச்சிட்டு இருக்கான். அவனால இப்ப ஃபோன் பேசமுடியாது.”
“நேர்ல வந்தேன்னா தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன். அவனைப் பேசச் சொல்லு.” என்று அபிமன்யு குரலை உயர்த்த, “என்னவோ முக்கியமா பேசணும் போல!” என்று சிணுங்கிக்கொண்டே சர்வேஸ்வரிடம் அலைபேசியைக் கொடுத்தாள் வெண்பா. “சொல்லு கரடி மச்சான்...” என்ற சர்வாவின் ஆரம்ப விளித்தலே அமர்க்களமாக இருக்க, அந்தப் பக்கம் அபிமன்யு என்ன வாசித்தான் என்று தெரியவில்லை.
“எதுக்கு கோவப்படுறே மச்சான்? உன் ஆளுன்னு சொல்லி வைச்சாக்கா, வீட்டுல இருக்கறவங்க இன்னும் கொஞ்சம் அக்கறையா பார்த்துப்பாங்க. ஃபிரெண்டுன்னு சொல்றதுக்கும், பியான்சின்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல.” சிரித்தான் சர்வா. “யோவ்! எகத்தாளம் புடிச்ச மாப்பிள்ள... நீ ரியாவுக்குப் பாதுகாப்பு கொடுப்பேன்னு பார்த்தால், போன வேகத்துல நாரதர் கலகம் பண்ணி வெச்சிருக்கே! அம்மா திடீர்னு என்மேல கோபமா இருக்காங்க.” என்றான் அபிமன்யு. “நாரதர் கலகம் நன்மையில் முடியும். நம்பு மச்சான். பிரியாணி சாப்பிட விடு. நல்ல பசியோட இருக்கேன்.” என்று அலைபேசியை அணைத்த சர்வா, தன் எதிரே நின்றவளை ஒரு மார்க்கமாகப் பார்க்க, வெண்பா அவனுக்குச் செல்லமாகப் பழிப்புக் காட்டினாள். “அதென்ன... ஒருநேரம் பேசும்போது ‘அவன்’... இன்னொரு நேரம் பேசும்போது ‘அவர்’ன்னு மாறிமாறி வருது.” தன் இருவிரல்களுக்கு இடையே வைத்து, வெண்பாவின் உதடுகளோடு விளையாடினான் சர்வா.
تاريخ الإصدار
كتاب : 19 ديسمبر 2022
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة