كتب الأطفال
நாடகம் என்பது கண்ணுக்கும், செவிக்கும் ஒருசேர விருந்தளிக்கக் கூடிய ஓர் அற்புதக்கலை நம் பள்ளி மேடைகளில் தமிழ் நாடகங்கள் ஒலிக்கவில்லையே எனும் குறையைப் போக்கியிருக்கும் ஒரே காரணத்திற்காக “விசித்திர அரசர்” எனும் நாடக நூலை எழுதிய ஆசிரியர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மொத்தம் ஏழு நாடகங்களை இந்நூல் கொண்டுள்ளது. இலக்கியம், சமூகம், எனப் பலவற்றை இந்நாடகம் பெற்றிருக்கிறது. நாடகத் தலைப்பைக் கொண்ட முதல் நாடகமான ‘விசித்திர அரசர்’ தமிழையும் அதன் தரத்தையும் அறியாத மன்னன் பின் தன் தவறை உணர்ந்தவனாய்ப் புடம் போட்ட தங்கமாய் மாறும் அழகை நயம்பட, சுவைபட விளக்குகிறது. தமிழுக்காகத் தன் உயிரையேத் தரத் தயங்காத அண்ணன் குமணன், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கேற்பத் திருந்திய அன்புத் தம்பி இவர்களின் பாசப் போராட்டத்தைக் கூறும் நாடகமாக ‘அன்புக்கோர் அண்ணன்’ பெயருக்கேற்ப இருக்கிறான். சாம்ராட் அசோகக் சக்கரவர்த்திக் கலிங்கப் போருக்குப் பின் அன்பின் வழியில், அமைதியை நாடிச் செல்வதைத் தத்ரூபமாகப் ‘புத்தம் சரணம் கச்சாமி’ நாடம் விளக்குகிறது.
تاريخ النشر
كتاب إلكتروني: 7 يوليو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت