5
Personal Development
“நீங்கள் வாழ்க்கையில் ஒரு உன்னத நிலையினை அடைய விரும்பினால் உங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணுங்கள். அந்தக் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் நம் மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள். ஆம். நம் எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமானால், இந்த நிகழ்காலத்தில் அதைப்பற்றிய ஒரு இனிய கனவு நம் மனதில் நிழலாட வேண்டும். மனதில் நல்ல எண்ணம், வாக்கில் இனிய நற்சொற்கள். செயலில் நேர்மை, நாணயம், உழைப்பு இவற்றை அஸ்திவாரமாகக் கொண்டு எதிர்கால சாதனை பற்றிய கனவுக் கோட்டையை மனதில் கட்டினால், நம் கனவு நினைவாவது நிச்சயம்.
இக் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்று இருப்பவைகளில் சில பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கட்டுரைகள். என்னதான் பெற்றோர்களாகிய நாம் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் முன்னேறினாலும், நம் குழந்தையை நல்ல முறையில் வளர்க்காமல் போனால், எதிர்காலம் அவர்களுக்கு கேள்விக்குறியாவதுடன், நமக்கும் வாழ்க்கையின் இறுதிக் காலம் வேதனைக் காலமாகிவிடுகிறது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்தத் தொகுப்பில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் பிரபல மாத இதழ்களான மங்கையர்மலர், அவள் விகடன் சினேகிதி, பெண்மணி ஆகிய இதழ்களில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை.
என் எழுத்துலகப் பணியில் துணைக்கரம் கொடுத்து வரும் அன்புக் கணவர் வழக்கறிஞர் திரு.என்.தெய்வசிகாமணி அவர்களுக்கும், எழுத்தார்வத்தை இரத்தத்தில் ஊட்டிய அன்புத் தாயார் நாவலாசிரியை திருமதி லீலாகிருஷ்ணன் அவர்களுக்கும், எழுத்துப் பணியில் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வரும் அன்பு சகோதரி திருமதி அகிலா செந்தில் வேலனுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
நூலினைப் படிக்கும் சகோதர சகோதரிகள் இந்நூல் பற்றிய நிறை குறைகளை தெரியப்படுத்தினால் நூல் இயற்றிய அர்த்தத்தை முழுமையாக அடைவேன் என நினைக்கிறேன். வாசகர்களின் அன்புக் கடிதங்கள் எனது அடுத்தடுத்த நூல்களிலும் தொடரும். நன்றி வணக்கம்
அன்புடன்
கீதாதெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
5
Personal Development
“நீங்கள் வாழ்க்கையில் ஒரு உன்னத நிலையினை அடைய விரும்பினால் உங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணுங்கள். அந்தக் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் நம் மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள். ஆம். நம் எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமானால், இந்த நிகழ்காலத்தில் அதைப்பற்றிய ஒரு இனிய கனவு நம் மனதில் நிழலாட வேண்டும். மனதில் நல்ல எண்ணம், வாக்கில் இனிய நற்சொற்கள். செயலில் நேர்மை, நாணயம், உழைப்பு இவற்றை அஸ்திவாரமாகக் கொண்டு எதிர்கால சாதனை பற்றிய கனவுக் கோட்டையை மனதில் கட்டினால், நம் கனவு நினைவாவது நிச்சயம்.
இக் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்று இருப்பவைகளில் சில பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கட்டுரைகள். என்னதான் பெற்றோர்களாகிய நாம் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் முன்னேறினாலும், நம் குழந்தையை நல்ல முறையில் வளர்க்காமல் போனால், எதிர்காலம் அவர்களுக்கு கேள்விக்குறியாவதுடன், நமக்கும் வாழ்க்கையின் இறுதிக் காலம் வேதனைக் காலமாகிவிடுகிறது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்தத் தொகுப்பில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் பிரபல மாத இதழ்களான மங்கையர்மலர், அவள் விகடன் சினேகிதி, பெண்மணி ஆகிய இதழ்களில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை.
என் எழுத்துலகப் பணியில் துணைக்கரம் கொடுத்து வரும் அன்புக் கணவர் வழக்கறிஞர் திரு.என்.தெய்வசிகாமணி அவர்களுக்கும், எழுத்தார்வத்தை இரத்தத்தில் ஊட்டிய அன்புத் தாயார் நாவலாசிரியை திருமதி லீலாகிருஷ்ணன் அவர்களுக்கும், எழுத்துப் பணியில் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வரும் அன்பு சகோதரி திருமதி அகிலா செந்தில் வேலனுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
நூலினைப் படிக்கும் சகோதர சகோதரிகள் இந்நூல் பற்றிய நிறை குறைகளை தெரியப்படுத்தினால் நூல் இயற்றிய அர்த்தத்தை முழுமையாக அடைவேன் என நினைக்கிறேன். வாசகர்களின் அன்புக் கடிதங்கள் எனது அடுத்தடுத்த நூல்களிலும் தொடரும். நன்றி வணக்கம்
அன்புடன்
கீதாதெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 1
AR
9 Jul 2022
அருமை அனைவரும் உறுதியாக படிக்க வேண்டும்
English
Singapore