5
Religion & Spirituality
ராமாயணம் –
கடவுள் மனிதனாக அவதரித்து, மனிதனாக வாழ்ந்து, மனித நேயத்தை வளர்த்ததை விவரிக்கும் அற்புத காவியம். வால்மீகி, கம்பர், இடையே துளசிதாசர், கபீர்தாசர் ஈறாக, கவிஞர் வாலிவரை ஆயிரக்கணக்கானோர் அந்த ராமாயணக் கதையைத் தத்தமது நோக்கில், தத்தமது புரிதலுக்குட்பட்டு, பலவாறாகத் தந்திருக்கிறார்கள்.
புராணக் காலந்தொட்டு எத்தனையோ உபந்யாசகர்கள் இந்த ராமாயணத்துக்கு இசை கூட்டி, மெருகேற்றி, தமது சொந்த, ஆக்கபூர்வமான திரிபுகளுடன் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த கதைகளைக் கேட்கும் அன்பர்களின் கூட்டமும் அரங்கு நிறைந்ததாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன. காரணம், எல்லோருக்கும் தெரிந்த ராமாயணக் கதையை இவர் எப்படிச் சொல்லப் போகிறார் என்று கேட்டறியும் ஆவல்தான்.
அந்த வகையில் என் கற்பனைக்குத் தோன்றிய சில புதுமை விளக்கங்களை இந்த ‘புதிய பார்வையில் ராமாயணம்’ புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். இது ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது, அது ஏன் அப்படி இருந்திருக்கக்கூடாது என்றெல்லாம் சிந்தித்ததன் விளைவு, இந்தப் புத்தகம். ராமயணத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களையும் மானசீகமாக சந்தித்து அப்படி நடந்ததாமே, இப்படி நடந்து கொண்டீர்களாமே என்று அவர்களிடம் நான் கேட்டபோது, அவர்கள் தந்த பதில்கள்தான் இங்கே பல அத்தியாயங்களாக விரிந்திருக்கின்றன.
Release date
Ebook: 17 May 2021
Tags
5
Religion & Spirituality
ராமாயணம் –
கடவுள் மனிதனாக அவதரித்து, மனிதனாக வாழ்ந்து, மனித நேயத்தை வளர்த்ததை விவரிக்கும் அற்புத காவியம். வால்மீகி, கம்பர், இடையே துளசிதாசர், கபீர்தாசர் ஈறாக, கவிஞர் வாலிவரை ஆயிரக்கணக்கானோர் அந்த ராமாயணக் கதையைத் தத்தமது நோக்கில், தத்தமது புரிதலுக்குட்பட்டு, பலவாறாகத் தந்திருக்கிறார்கள்.
புராணக் காலந்தொட்டு எத்தனையோ உபந்யாசகர்கள் இந்த ராமாயணத்துக்கு இசை கூட்டி, மெருகேற்றி, தமது சொந்த, ஆக்கபூர்வமான திரிபுகளுடன் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த கதைகளைக் கேட்கும் அன்பர்களின் கூட்டமும் அரங்கு நிறைந்ததாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன. காரணம், எல்லோருக்கும் தெரிந்த ராமாயணக் கதையை இவர் எப்படிச் சொல்லப் போகிறார் என்று கேட்டறியும் ஆவல்தான்.
அந்த வகையில் என் கற்பனைக்குத் தோன்றிய சில புதுமை விளக்கங்களை இந்த ‘புதிய பார்வையில் ராமாயணம்’ புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். இது ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது, அது ஏன் அப்படி இருந்திருக்கக்கூடாது என்றெல்லாம் சிந்தித்ததன் விளைவு, இந்தப் புத்தகம். ராமயணத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களையும் மானசீகமாக சந்தித்து அப்படி நடந்ததாமே, இப்படி நடந்து கொண்டீர்களாமே என்று அவர்களிடம் நான் கேட்டபோது, அவர்கள் தந்த பதில்கள்தான் இங்கே பல அத்தியாயங்களாக விரிந்திருக்கின்றன.
Release date
Ebook: 17 May 2021
Tags
Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
English
Singapore