ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
புஜங்கம் என்றால் பாம்பு என்று பொருள். சம்ஸ்கிருதத்தில் செய்யுட்களைப் புனையும் ஓசைநயங்களில் (ஸ்வரங்களில்) புஜங்கமும் ஒன்று. அதற்கேற்ப, சுப்ரமண்ய புஜங்கம் பாடல் முழுவதுமே, ஓர் அரவம் (பாம்பு) வளைந்து நெளிந்து சரசரவெனச் செல்வதைப் போன்ற அரவம் (ஓசை) கொண்டது. மேலும், பாம்பு என்பது குண்டலினி சக்தியின் உருவகம். சுப்ரமண்யனோ, தனது அன்பர்களின் குண்டலினி சக்தியை மேலோங்கச் செய்யும் யோகீஸ்வரன். அதேநேரத்தில் புஜ + அங்கம் என்பதால் புஜங்கம் என்றும் ஒருசிலர் பொருள் கூறுவர். அதன்படி, ஸ்கந்தனின் கந்தங்களில் (தோள்களில்) சூடப்பட்ட பெருமை கொண்டது என்றும் இந்தப் பாமாலையைக் குறிப்பிடலாம். திருச்செந்தூரில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஆசுகவியாய் இந்தப் பாடலைப் பாடியபோதே, அவருக்கு சுப்ரமண்யக் கடவுள் பிரத்யட்சமானார் என்பது ஆன்றோர் கருத்து. அந்த ஜகன்மோகனனின் அருளாலும், ஜகத்குருவின் ஆசியாலும் என்னால் இயன்றவரை மூலஸ்லோகத்தை ஒத்த ஓசைநயத்தையும், பொருள்நயத்தையும் தமிழில் கொண்டுவர முயன்றுள்ளேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย