ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
அறிவியல் துளிகள் வரிசையில் இறுதி பாகமாக இந்த பதினெட்டாம் பாகம் அமைகிறது. கடந்த முன்னூறு ஆண்டு வரலாற்றைப் பார்க்கும்போது அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் ஒன்றாக அமைகிறது. இது வரை தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட அறிஞர்கள் நோபல் பரிசைப் பெற்றிருக்கின்றனர். அறிவியலில் மலைக்க வைக்கும் எழுநூறுக்கும் மேற்பட்ட துறைகளை இணையதளத்தில் பார்க்க முடிகிறது. இது அறிவு சார்ந்த ஒரு புதிய உலகத்தில் நாம் வாழ்வதைக் காட்டுவதோடு இந்த அறிவியல் உலகில் நாமும் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கேற்ப வளர வேண்டி இருப்பதை உணர்த்துகிறது. அறிவியலில் அனைத்தையும் அறிதல் முடியாது என்றாலும் கூட குறைந்தபட்சமாக அடிப்படையான விவரங்களை அறிதல் இன்றியமையாதது. அந்த வகையில் அறிவியல் துளிகளின் 18 பாகங்களும் பல முக்கிய விஷயங்களைத் தருவதோடு அறிவியலில் ஒரு ஆர்வத்தை விதைத்து மேலும் புதியனவற்றை அறிய அனைவரையும் தூண்டும்.
இந்த பதினெட்டாம் பாகம் 443 முதல் 470 அத்தியாயங்கள் முடிய 28 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. அறிவியல் மூலம் மனித குலம் மரணத்தை வெல்லும் என்ற பிரமிப்பூட்டும் கணிப்புடன் நூல் முடிகிறது. நூலின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள ‘எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என செங்கதிர்த் தேவனை வேண்டும் காயத்ரி மந்திரம் நமக்கு நல்ல ஆக்கபூர்வ சிந்தனையை வழங்கும் என்பதில் ஐயமில்லை!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย