ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
திருத்தலங்களை வலம்வந்து அனுபவித்து என் உணர்வுகளைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்ளும் கட்டுரைகளின் நாலாம் தொகுப்பு இந்த நூல்.
முன்பே ‘கண்ணன் நடந்த புண்ணிய பூமி'யும், 'தலங்களின் தரிசனம்' நூலும், புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த 'திருகோகர்ணம் தலப் பெருமை' நூலும் வாசக அன்பர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அதேபோல், இந்தத் தொகுப்பும் உங்களை வந்தடைந்துள்ளது.
பல கட்டுரைகள், ஆண்டு தவறாமல் நான் தீபாவளி மலர்களுக்காகப் பயணம் மேற்கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். இவற்றை வெளியிட்டு ஆதரவளிக்கும் கல்கி வார இதழ், லேடீஸ் ஸ்பெஷல், கோபுர தரிசனம் இதழ்களின் ஆசிரியர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
ஒவ்வொரு பயணத்தின் போதும் அனுபவங்கள் புதிது புதிதாய்க் கிடைக்கின்றன. இந்தப் பயணங்கள் பெரும்பாலானவற்றில் உடன்வந்து படப்பதிவு செய்து வழங்குகிறவர் என் இனிய நண்பர் கலைமாமணி 'யோகா' அவர்கள். இம்முறை ஒரு கோட்டோவியராக என்னுடன் நெல்லைக்கு வந்து படங்களை ஒவியங்களாகவும் தீட்டியிருப்பவர் நண்பர் ஒவியர். வேதா. இவர்களுக்கு என் நன்றி; எப்போதும்.
நூலை அழகுற ஒளியச்சுச் செய்து தரும் நண்பர் அழகர், அட்டைப்படத்தை மிகவும் பொருத்தமான முறையில் வடிவமைத்துத் தந்துள்ள ஓவியர் நாதன் ஆகியோருக்கு என் நன்றி.
அன்புடன்
- சுப்ர. பாலன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย