ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
அர்ஜுனனுக்குச் சாரதியாக கண்ணபிரான் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைகிறான். அதுவரை மனதில் உறுதியோடு வீரம் பொங்க இருந்த அர்ஜுனன் எதிரில் படையோடு அணிவகுத்து நிற்கும் தனது ஆச்சாரியார்களையும், பிதாமஹரையும் மற்றும் தனது சொந்தங்களையும் கண்டு மலைத்துப் போய் மதிமயக்கம் கொண்டு "என் உறவுகளுடன் நான் போரிடமாட்டேன்" என்று காண்டீவத்தைக் கீழே போட்டுவிடுகிறான். அவனை இப்போது போரிடவைக்கவேண்டும் என்பதே ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் குறிக்கோள். மாயவனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் எண்ணற்ற ஜாலங்களைச் செய்தது போல இங்கேயும் ஒரு சிறு மாயம் செய்து அர்ஜுனனை போர்த்தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம். ஆனால், தேகம், தேகி, ஆத்மாவைப் பற்றி அவனுக்குப் பாடம் புகட்டுவதாக, உபதேசம் செய்வதாக, வாழ்க்கையைப் பற்றியும் உறவுகள் பற்றியும் சொல்லிக்கொடுப்பதாக, பிரகிருதி என்றும் ஈஸ்வரன் என்றும் புகழப்படும் புருஷோத்தமன் யார் என்றும் அவனை அடையும் வழிகள் என்ன என்பது பற்றியும் ஒரு உரை நிகழ்த்துவதாக ஞானமும் மோக்ஷமும் அடைவதற்கான மார்க்கங்களைக் காட்டுவதற்காகவும் பகவத் கீதை வியாஸபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் வருகிறது. இது அர்ஜுனனுக்காகவா? அவனுக்கு மட்டுமல்ல... நமக்கும் தான் வாசிக்கலாமா...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย