ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
1 จาก 1
นอนฟิกชั่น
கோமல் சுவாமிநாதன் (1935 – 1995) ஒரு தமிழ் நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் இலக்கிய இதழ் 'சுபமங்களா'வின் ஆசிரியராக இருந்தவர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராக கருதப்படுபவர்.
கறுப்பு வியாழக்கிழமை, கோமல் சுவாமிநாதன் 1988ம் ஆண்டு எழுதி தன் ஸ்டேஜ் பிரெண்ட்ஸ் குழுவின் மூலம் மேடையேற்றிய அரசியல் நாடகம். 1988ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் ஒரு வியாழக்கிழமை அன்று நடந்த வரலாறு காணாத அமளியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம்.
அரசியலில் புல்லுருவிகளாக ஊடுருவிய கண்ணியமற்ற சுயநல அரசியல்வாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பதவிக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள், இவர்களால் அரசியல் எப்படி சீரழிந்து அதன் உச்சத்தை தொட்டது என்பதை சித்தரிக்கும் நாடகம். இந்தக் கருத்தை வலியுறுத்த நாடகத்தை சரித்திர பாணியில் நடப்பதாக அமைத்து, கொஞ்சம் நகைச்சுவை கலந்து வழங்கியிருக்கிறார் கோமல். இந்த நாடகத்தை சங்கரதாஸ் என்ற நாடகக் கலைஞர் மக்களுக்கு நடத்திக்காட்டுவதாக அமைத்து அந்த பாத்திரத்தில் தானே நடித்துள்ளார் கோமல்.
அரசியலில் உலவுகிற புல்லுருவிகளைக் களை எடுத்து, சுயநலம் பேராசையற்ற மனிதர்களை நாற்காலியில் உட்கார வைக்க, சமதர்மமும் பொதுவுடைமையும் இலட்சியமாகக் கொண்ட இளைஞர்கள் திரண்டால் இந்த அவலத்திலிருந்து நாம் மீண்டு வர முடியும். அப்போது நாம் நிச்சயம் வெல்வோம் என்று நேர்மறை கருத்தோடு முடிவடைகிறது நாடகம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 28 สิงหาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย