ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
หนังสือเด็ก
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார்.
சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 เมษายน 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย