ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
சிறுகதை என்றால் என்ன? சிறுகதை எப்படி இருக்க வேண்டும்? இந்த விவாதம் என் கதையை படித்த ஒரு நண்பருடன் ஏற்பட்டது.
தமிழ் சிறுகதைகள் ஏறத்தாழ 1950க்கு பிறகிலிருந்துதான் நமக்கு பொதுவாக கிடைக்கின்றன. தமிழ் எழுத்தாளராகிய என் தகப்பனார் திரு.ம.ந.ராமசாமியின் முதல் சிறுகதை 1947ல் பிரசுரிக்கப்பட்டது. மிகப் பழைய தமிழ் பத்திரிகையான ‘ஆனந்த விகடன்’ 1928ல் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குமுன் ‘விவேக சிந்தாமணி’ 1892ல் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இவற்றில் வெளியான சிறுகதைகளை அதிகம் காண முடிவதில்லை. ஒரு வேளை முனைந்து தேடினால் கிடைக்கும் என்னவோ.
கிடைத்த தமிழ் சிறுதைகளை படிக்கையில் மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சில விடைகள் கிடைக்கின்றன.
சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய நிகழ்ச்சியை, வெகுசில பாத்திரங்களுடன் சிறிய அளவில் மைக் அகப்பட்ட கதை. இது என்ஸைக்ளோபீடியா பிரிட்டான்னிகாவின் கூற்றை ஒத்துப்போகிறது. இந்த அமைப்பு டால்ஸ்டாய் எழுதிய ருஷ்ய சிறுகதைகளிலும் காணப்படுகிறது. சிறுகதையில் பாத்திரங்கள் விலாவாரியாக விவரிக்கப்படுவதில்லை. அவர்கள் கதையில் வரும் நிகழ்ச்சிகள மற்றும் உரையாடல்கள் மூலம் தாமாகவே விவரம் அடைகின்றனர். ஒரு பாத்திரத்தின் முழு பின்னணி தேவை என்றால் மட்டுமே விவரிப்பை காண்கிறோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มกราคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย