ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
"ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் சிறுகதைகள்” என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு புதையல். வெவ்வேறு கோணங்களில் அமைந்துள்ள எடுத்துக்காட்டு கதைகள். மனிதனை மனிதனாக வாழத்தூண்டும் மகத்தான சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியத்தின் கருவாக உள்ளன. வாழ்க்கை என்னும் அனுபவ ஓடையில் மலர்ந்துள்ள அர்ச்சனை மலர்கள் அவை.
“செலவு பண்ணினாலும் பரவாயில்லை வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி... இல்லேன்னா இட்லி சின்னது. காப்பிக்குச் சர்க்கரை போதாது. நெய் சுத்தமில்லேன்னு இந்தக் கதிரேசன் தினமும் கத்திட்டிருப்பான்” என்று எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட எடுத்த வேலையை செய்து முடிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறது. இது யதார்த்த வாழ்வின் படப்பிடிப்பு.
வீட்டு நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதால் ஏற்படும் அவலங்களைப் பட்டியல் போடுகிறது ஒரு கதை.
தெய்வத்தின் பேரால் திருவிழாவென்று பணத்தைக் கொட்டிக் கரியாக்குவதை விட ஒருவருடைய வாழ்க்கைக்கு உதவும் கல்விக்கு உதவுவது கோடி மடங்கு புண்ணியந்தரும் என்பது மற்றொரு கதை.
சமுதாயப் பணி என்கிற போர்வையில் வீட்டையும், குடும்பத்தையும், உறவுகளையும் புறக்கணித்துவிட்டு சாதிக்கப் போவது எதுவுமில்லை. குடும்பத்துக்குப் பின்னரே சமூகச் சேவை என்பது நல்ல வாழ்வியல் சிந்தனை.
தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தல் என்பது தீயவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுகமாக ஆதரவு அளிப்பது போலாகும் என்று ஒரு சிறுகதையில் சிறந்த குடிமக்களின் கடமை நினைவூட்டப்படுகிறது. இன்று தேர்தல் எந்திரத்தில் நோட்டாவை பயன்படுத்துவதுகூட அப்படித்தான்.
படித்துவிட்டு வேலை தேடி அலைவதை விட எந்த வேலையானாலும் படித்த அறிவைக் கொண்டு இன்னும் சிறப்பாகச் செய்து ‘செய்யும் தொழிலே தெய்வம்' என உழைக்க வலியுறுத்துகிறது ஒரு கதை. தொழிலுக்குத் தொழில் உத்திகள் மாறும் என்பது படிப்பினையாக உள்ளது.
மனிதர்கள் தவறலாம் மகான்கள் தவறக்கூடாது என்னும் படிப்பினை மூலம் ‘துறந்தவர்கள் எல்லாம் துறந்தவரா' என்னும் வினாவாகி நிற்கும் பாதிரியாரைப் படம் பிடிக்கக் காணலாம்.
"வாழ்ந்து முடிஞ்ச நிறைவோட சாவிலே கூட நாம் சேர்ந்ததே போயிடலாம்" என்று மறைந்த கணவனைக் கட்டிக் கொண்டு மனைவி கோதாவரியில் ஜலசமாதி ஆகும் கதை கண்ணீர்க் காவியம். திரைப்படமாகும் தரமுடைய கதை.
நல்ல வீட்டு வேலைக்காரர்கள் கிடைத்துவிட்டால் அவர்கள் விட்டுச் செல்லாத வகையில் ஈர்ப்புடையவர்கள் போல காட்டி உழைப்பைச் சுரண்டும் வீட்டு சொந்தக்காரர்களை வெளிச்சம் போடுகிறது ஒரு கதை.
"மூன்று பேராகப் போகிறோம் என்று மனைவியை முழுகாமல் பார்க்க ஆசைப்பட்டவனுக்கு அவள் முழுகாமலேயே மூன்று பேராகினர் அவள் தம்பியின் வருகையால்" என்னும் நளினமான நடைச்சித்திரம் சிந்தனைக்கு விருந்து. நகைச்சுவை விருந்தும்கூட.
"தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறு வேறுதான்” என்பதைப் போல தந்தையானாலும் மகனானாலும் ஒருவர் உதவியை ஒருவர் பெறக்கூடாது என்ற மனஉறுதியோடு வாழும் தந்தை மகனைக் காட்டுவது ‘வைராக்கியம்'.
- முனைவர் குமரிச் செழியன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย