ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்று, பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றோம் என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்றனர். அவர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக தேசிய அளவில் ஜான்சிராணி, அன்னிபெசன்ட் அம்மையார், பிகாஜி காமா, ராஜ் மாதா அகல்யா பாய், கித்தூர் ராணி சென்னம்மா, சரோஜினி நாயுடு போன்றோரும், தமிழகத்தில் வேலுநாச்சியார் தில்லையாடி வள்ளியம்மை போன்றோரும் ஆவர். இவர்களைத் தவிர கடலூர் அஞ்சலையம்மாள், லட்சுமி கௌல், லீலாவதி அம்மையார், துர்காவதி,தேவி, துர்காபாய் தேஷ் முக்ஹ், போன்ற பல பெண் போராட்ட வீராங்கனைகள் அறியப்படாமல் உள்ளனர்.
‘பூட்டைத் திறப்பது கையாலே – நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.’
என்று பாரதியார் பாடினார். நாட்டை அந்நியர் இடம் இருந்து மீட்க போராடினர் பல பெண்கள்.
அத்தகைய வீர பெண்மணிகள் வரலாற்றை இந்த நூலின் அஷ்டலட்சுமி எழுத்தாளர்கள் வெளி உலகிற்கு அறிமுகபடுத்தி உள்ளனர். அனைவரும் படித்து தெரிந்து கொள்வது மட்டுமன்றி பாதுகாத்து வைக்க வேண்டிய புத்தகம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 กรกฎาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย