ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
“காதல் மனித இனத்தின் தடுக்க முடியாத இசையாகும். காதல், பிரிதோர் இனத்திற்கும் இன்றியமையாத தேவையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று, உருவம் மாறினாலும் மாறாமல் நின்று உள்ளத்து உணர்ச்சிகளுக்கெல்லாம் தலைமை வகுப்பது காதலாகும். காதல் வயப்பட்ட சிந்தனை உலகில் வேறு சில நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் இருப்பதையே அறிய மறுக்கிறது. முழு இதயமும் அதற்கே உரிமையாகிவிடுகிறது...”
இப்படியெல்லாம் சொன்னவர் கவியரசு கண்ணதாசன்.
காதலுக்காகப் பொய் சொல்லாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பது சந்தேகமே! பெற்றவர்களிடமோ, கூடப் பிறந்தவர்களிடமோ - இவ்வளவு ஏன்? காதலிகளிடமோ, காதலர்களிடமோ சர்வ சாதாரணமாகப் பொய் சொல்லி விடுகிறார்கள் என்பது நடைமுறை வாழ்க்கையில் கண்டறிந்த உண்மை! காதலே பொய் என்று விரக்தியிலோ, அனுபவத்திலோ, சொல்பவர்களும் உண்டு!
இப்படி உலகையே ஆட்டி வைக்கும் ஆண்-பெண் உறவுக்கான காதலை மையக் கருவாகக் கொண்டு இன்றும் ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றன. சினிமாக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவற்றுள், காதல் பற்றிய சிறுகதைகளை மட்டும் தொகுத்துள்ளேன். 1963லிருந்து எழுதி வருவதால் அந்த அந்த வருடங்களில் இருந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரையாடல்களும், பொருட்களின் விலைகளும், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றியும் தகவல்கள் இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஓ! அந்த வருடங்களில் இப்படியெல்லாம் இருந்திருக்கிறதா என்ற வரி மனதில் ஓடும்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย