ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ภาษาต่างประเทศ
தமிழ்மொழியில் உள்ள பிரபந்தங்கள் என்னும் தொண்ணூற்றாறுவகைச் சிற்றிலக்கியங்களிடையே சிறந்து விளங்கி ஒளிர்வது பிள்ளைத்தமிழ். எனக்கு இளம்பிராயத்திலேயே இவ்விலக்கியத்தின்மீது ஒரு ஆழ்ந்த பிடிப்பு உண்டானது; அது ஏன் என ஆராய்ந்து பார்க்கிறேன். தெய்வச் செயலேயன்றிப் பிறிதொரு காரணமும் விளங்கவில்லை.
பேராசிரியர் முத்துக்குமாரசுவாமி ஐயா, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் ஆகிய ஐந்து பருவங்களுடன் தாம் எழுதி வந்த தொடரை நிறுத்திக்கொண்டு விட்டார். நான் அவரைக் கேட்டபோது தமக்குத் தொடர விருப்பமில்லை என்று மட்டும் கூறினார்.
நீண்ட நாட்களின் பின்பு, நான் எனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தபின்பு, மிகுந்த தயக்கத்துடன் நான் அந்தத் தொடரைத் தொடர்ந்து எழுதலாமா எனக் கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் எனக்கு ஆசிகளையும் அனுமதியையும் வழங்கினார் அப்பேரருளாளர்.
அவர் திருவடிகளை வணங்கி நான் தொடர்ந்து எழுதிய இத்தொடர் இன்று முடிவடைந்து ஒரு நூலாக உருவெடுத்து தமிழ் ஆர்வலர்கள் கையில் தவழ்கின்றது. இலக்கண நூல்களில் சுட்டப்பட்ட அனைத்துப் பருவங்களையும் பற்றிய விரிவான பார்வையை 24 அத்தியாயங்களில் பேராசிரியர் ஐயாவும், நானும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளோம். குருவருளும் (ஐயாவின்) திருவருளும் கூடியதானால் தான் இது இயன்றது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 27 มิถุนายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย