ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ประวัติศาสตร์
நான் சரித்திர நாவல்களின் ரசிகை. கடந்த வருடம் சரித்திர நாவல்கள் எழுதும் ஆர்வத்தால் "ராஜராஜன் சபதம்", "நான்மாடக் கூடல் நாயகி" என்ற 2 நாவல்களை எழுதினேன். அடுத்து என்ன என்று சிந்தனை எழுந்தது. ராஜராஜனும் ராஜேந்திரனும் நமது வரலாற்று நாயகர்களில் முதன்மையானவர்கள். ஏராளமான சரித்திர நாவல்கள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கின்றன. நானும் ராஜேந்திர சோழனை எழுத முனைந்த சமயம் மற்றவர்கள் இதுவரை தொடாத அவனின் வாழ்க்கைப் பக்கத்தை எழுத நினைத்தேன்.
ராஜேந்திரரே இந்த நாவலின் நாயகனாக இருந்தாலும், அவரின் வாழ்க்கையே விரிவாக விவரிக்கப்பட்டாலும், ராஜேந்திரரின் ஆன்மாவாக, அடிநாதமாக பரவையே இருக்கிறாள். நாவலின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளும், படையெடுப்புகளும் சரித்திரம் பதிவு செய்தவையே. கூகுள் தேடல்கள் சில நிரப்பப்படாத பக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தன. சில சிறிய கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மட்டுமே எனது கற்பனை. சரித்திரப் பிரியர்களுக்கு இந்த நாவல் நல்ல விருந்து படைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மிக்க நன்றி!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย