'சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை' என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எல்லா ஹைக்கூக்களிலும். படிப்பதற்கு இனிதான இந்தக் கவிதைகளுக்கு ஓவியர் செந்திலின் தூரிகைக் கோடுகள் அழகூட்டுகின்றன. 'எது கிழிசல்/ எது நாணயம்/ பிச்சைக்காரன் விரித்த துண்டு' என்கிற கவிதையில் வொய்டு ஆங்கிள் விரிகிறதென்றால், 'நெரிசல் மிகுந்த சாலையில்/ ஊர்வலம் போகிறது வீடு/ முகவரி மாற்றம்' என்கிற வரிகளின் மீது ஊர்வது நகரத்தின் டீசல் நாகரிகமல்லவா! - இந்து தமிழ் கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி “ஹைக்கூ'வுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை; அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில், பிருந்தா சாரதி எழுதிய இந்த ‘ஹைக்கூ' கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன." "மணல் வீடு கட்டி/விளையாடுகிறது/அகதியின் குழந்தை”, “இரு நாட்டுக் கொடிகளையும்/ஒரே மாதிரி அசைக்கிறது/ எல்லையில் வீசும் காற்று” என்பன போன்ற சுவையான கவிதைகள்.
- தினத்தந்தி
தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடான 'மீன்கள் உறங்கும் குளம்' பிருந்தா சாரதியின் ஹைகூ கவிதை களின் தொகுப்பாகும். 'மீன்கள் உறங்கும் குளம்' அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பரிசு, தமிழ் நாடு அறிவியல் இயக்கப் பரிசு, கவிதை உறவு பரிசு எனப் பல பரிசுகளைப் பெற்றது. எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் பழனி பாரதி ஆகியோரின் அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கிறது. இயற்கை நேசம் , காட்சிப் படிமம் வழியே பிரபஞ்ச உணர்வு பெறுதல், எளிமை ஆகிய ஹைகூ இலக்கணங்களை இயல்பாகப் பெற்றிருக்கும் இந்நூல் தமிழ் ஹைகூ நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
'சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை' என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எல்லா ஹைக்கூக்களிலும். படிப்பதற்கு இனிதான இந்தக் கவிதைகளுக்கு ஓவியர் செந்திலின் தூரிகைக் கோடுகள் அழகூட்டுகின்றன. 'எது கிழிசல்/ எது நாணயம்/ பிச்சைக்காரன் விரித்த துண்டு' என்கிற கவிதையில் வொய்டு ஆங்கிள் விரிகிறதென்றால், 'நெரிசல் மிகுந்த சாலையில்/ ஊர்வலம் போகிறது வீடு/ முகவரி மாற்றம்' என்கிற வரிகளின் மீது ஊர்வது நகரத்தின் டீசல் நாகரிகமல்லவா! - இந்து தமிழ் கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி “ஹைக்கூ'வுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை; அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில், பிருந்தா சாரதி எழுதிய இந்த ‘ஹைக்கூ' கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன." "மணல் வீடு கட்டி/விளையாடுகிறது/அகதியின் குழந்தை”, “இரு நாட்டுக் கொடிகளையும்/ஒரே மாதிரி அசைக்கிறது/ எல்லையில் வீசும் காற்று” என்பன போன்ற சுவையான கவிதைகள்.
- தினத்தந்தி
தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடான 'மீன்கள் உறங்கும் குளம்' பிருந்தா சாரதியின் ஹைகூ கவிதை களின் தொகுப்பாகும். 'மீன்கள் உறங்கும் குளம்' அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பரிசு, தமிழ் நாடு அறிவியல் இயக்கப் பரிசு, கவிதை உறவு பரிசு எனப் பல பரிசுகளைப் பெற்றது. எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் பழனி பாரதி ஆகியோரின் அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கிறது. இயற்கை நேசம் , காட்சிப் படிமம் வழியே பிரபஞ்ச உணர்வு பெறுதல், எளிமை ஆகிய ஹைகூ இலக்கணங்களை இயல்பாகப் பெற்றிருக்கும் இந்நூல் தமிழ் ஹைகூ நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย