ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ภาษาต่างประเทศ
தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று தன் திரைக்காவியமான பராசக்தியில் எழுதிய காலம் முதல் தன் இறுதி மூச்சு நிற்கும் வரை உயரிய தனித்தன்மையோடு அகவை முதிர்ந்த நிலையிலும் ஓய்வுக்கே ஓய்வைகொடுத்து ஓய்வறியா உதயசூரியனாய் உலவ வந்த நம் இதயச் சூரியனே நம் கலைஞர் அவர்கள்.
பன்முகப் பார்வைகள் கொண்ட நம் பாசத்திற்குரிய மக்கள் போற்றும் மாண்புமிகு தமிழக முதல்வராக ஐந்து முறை பொற்கால ஆட்சியை மாட்சியோடு தந்த மாண்புநிறை முத்தமிழ் அறிஞர், தலையாத் தமிழுக்கு நிலையான மணிமகுடம் சூட்டிய ஒரே முதல்வர் மட்டுமல்ல தமிழ்த் தாயின் தவப்புதல்வர்!
மனோகரமான மதுத்தமிழ் கலைஞருடையது! சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றார் பாத்தேர் சாரதி. பாரதி அந்த மாகவி பாரதி இன்றிருந்தால் சொல்லில் உயர்வு கலைஞர் சொல்லே என வியந்து மெய் மறந்துபோய் இருப்பான். நடிகர்திலகம் சிவாஜியை பிறவிக் கலைஞன் என்பார்கள்.
நம் அருமைக் கலைஞரோ கருவிலேயே திருவுடையவர் அதனால்தான் திருவாரூரிலே பிறந்தார். திருவாரூர் என்றாலே இசை வெள்ளம் பெருக்கெடுக்கும், முத்தமிழ் மணக்கும் நாத நல்லிசை உயிரை உருக்கும் தேவாரத் திருமுறை உள்ளத்தை மகிழ வைக்கும் நாட்டியம், நாடகம் என கலை கட்டும். கலையாவும் பயிலும் கலையூரே திருவாரூர், திருவாரூரின் திலகமென திருக்குவளை எனும் அழகான ஊரில் அருளாளர் முத்துவேலர் – திருமதி அஞ்சுகம் அம்மையார் இணையர் ஈன்றெடுத்த அருந்தவப் புதல்வர் கலைஞர் அவர்கள். மாணவப் பருவத்தில் தொடங்கி தமிழாக வாழத் தொடங்கினார்! தமிழையே வாழவைத்தார் தமிழினத்தையே மகிழ்வுடன் வாழ வைத்த தரணிபோற்றும் தங்கத்தலைவர் கலைஞர் அவர்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 23 ธันวาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย