ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
"நார்த்தாமலை சிவன் கோவில்களின் அற்புதங்கள்” எனும் இந்நூல் நம் புராதனச் சின்னங்களாகவும் மற்றும் மன்னர்களின் வரலாற்றையும் பேசுகின்றன. விஜயாலய சோழீச்சுரம் கோயில் பிற்காலச் சோழர்களின் அரசியல் நுழைவை வெளிப்படுத்தும் சின்னமாக இருக்கிறது. முத்தரையர்களின் அரசியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கலைப்பொக்கிஷமாகவும் அமைகிறது. அதோடு இவ்வூரில் கட்டப்பட்டுள்ள பிற சிவன் கோவில்களும் அதனின் வரலாறும் மன்னர்கள் செய்த திருப்பணிகளும் வரும் இளம் தலைமுறைகள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியச் செய்திகளாக அமைந்திருக்கின்றன. சுனைத் தண்ணீருக்குள் இருந்து அருள் பாலிக்கும் ஜ்வரகரேஸ்வரர் குறித்த செய்திகள் ஆச்சரியம் ஊட்டுகின்றன.
நார்த்தாமலையில் காணலாகும் தங்கப்புதையல், சித்தன்ன வாசல் இருக்கும் இடத்திற்க்கும் இவ்வூருக்கும் இடையிலான சுரங்கப் பாதை போன்ற வியப்பை அளிக்கும் செய்திகள் இந்நூலில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. கலைப் படைப்பு குறித்த விவரங்கள் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கோவில்கள் குறித்த செய்திகள் ஆகும். அரிய செய்திகள் பல நிறைந்திருக்கும் வரலாற்று ஆவணமாக இந்நூல் விளங்குகிறது. பேராசிரியர் பாரதிசந்திரன் அரிதின் முயன்று கோயில்கள் குறித்தச் செய்திகளைச் சேகரித்து அழகாக எழுதியுள்ளார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 พฤษภาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย