ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்குத் தாயான மல்லிகா, காவல்துறையில் பணி புரியும் தன் கணவன் மீது அளவுக்கதிகமாய்ச் சந்தேகப் படுகிறாள். அந்த சந்தேகத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில், தாலியைக் கழற்றி கணவன் முகத்தில் எறிந்து விட்டுக் கைக் குழந்தையோடு வெளியேறி தனியாக வாழ்கிறாள்.
அரசு பொது நூலகத்துறையில், நூலகராக பணி கிடைக்கிறது. வாழ்க்கை ஓட்டத்தில் தன் பெண்ணுக்குத் திருமணம் முடித்து, அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் தன் கணவரை மல்லிகா மீண்டும் சந்திக்கிறாள்.
அவளையும் மீறி பழைய அன்பும், பாசமும் வெளிப்பட்டு விட, அவருடன் நெருங்கிப் பழகுகிறாள். அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும், என்று மகளும் விரும்புகிறாள்.
ஆனால், விதியரக்கன் வேறு விதமாய் அல்லவா விளையாட நினைக்கிறான். அவனை மீறி மானிட சக்தியால் என்ன செய்து விட முடியும்?
கதையைப் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย