ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சகோதரி அகிலா ஒரு தமிழ் அறிஞர். என் மனைவியின் மூலம் அறிமுகமானார். அவரது அற்புதமான மன வலிமை, அவரது தெளிவு மற்றும் அவரது மொழி வெளிப்பாடுகள் எனக்கு ஆச்சரியமூட்டின. அவர்களுக்கு கடுமையான இதயநோய் இருப்பதை தெரிவிக்க வேண்டிய அந்த நாள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களுடைய மன வலிமையை சோதிப்பதாக அமைந்தது. என்றாலும் அவருக்கு மேலும் ஒரு பரிச்சையை நான் வைக்க நேர்ந்தது. அவரின் பைபாஸ் அனுபவத்தை எழுத்து வடிவத்தில் வடிக்க கூறினேன். இந்த புத்தகத்தில் உள்ள முழு அனுபவமும் அவரது உரையாடலில் உங்களை ஒரு கண்ணுக்கு தெரியாத பார்வையாளராக ஆக்குகிறது.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்கிற வள்ளுவ பெருந்தகையின் கூற்றிற்கு இணங்க சகோதரி அகிலா மெய்ப்பித்து மெய்யுணர்ந்து மெய்பொருள் கண்டு கூறியுள்ளார். அவரின் நகைச்சுவை உணர்வும் உரைநடையின் தெளிவும் அருமை. மருத்துவத்தின் மருந்தற்ற பகுதியை அழகாக எடுத்து உரைத்துள்ளார், மருத்துவத்தின் மகத்துவமே அம்மறைபொருள் தானே. அவரின் அனுபவமே மற்றவர்களுக்கு ஒரு விளக்க பாடமாக உள்ளது. நாங்கள் நோயாளிகளுக்கு ஆன்ஜியோக்ராம் மற்றும் பைபாஸ் சிகிச்சை பற்றி கூறுவதை இந்த புத்தகத்த்தின் வாயிலாக எளிதாக்கியுள்ளார். அவரின் எழுத்து பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
டாக்டர் கே சொக்கலிங்கம்,
இருதய மருத்துவர்,
ராயல் கேர் மருத்துவமனை,
கோயம்புத்தூர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย